Sunday, 27 November 2016

Magal

mtHfs; vd; kfsy;y
  xd;Wf;F ,uz;lha;
     ,U fz;zpd; tpopaha;
  gdpj;Jspfs; kpje;JtUk;
     rpy;nyd;w rpWfhiy
  iffspy; tpOe;j vd;
     ,jaj;jpd; capH Jspfs;
mtHfs; vd; kfsy;y
  vupj;JtpLk; fdy; eLNt
     vupkiyaha; epd;whYk;
  rpupj;J tpOk;  Kj;Jf;fshy;
     fdy; nghRf;fp
  tpupj;j kyH gLf;ifapNy
      vd; kdij jhyhl;Lk;
mtHfs; vd; kfsy;y
   nehbNeu rpdj;jpdpNy
     Kfk; rptf;f epd;whYk;
   kWfzNk nfhQ;Rnkhop
      ghy; kzf;Fk; ghitfs;
    neQ;rpdpNy g+kioaha;
        JQ;Rfpd;w nry;tq;fs;
mtHfs; vd; kfsy;y
   clypw;F capH nfhLj;J
      kPz;Lk; vd;id kPz;Lk; vd;id
          gps;isaha; jto tpl;l

               ep[cyf gpuk;khf;fs;   

Monday, 2 May 2016

வாழ்க்கைத் துணை

சிறை முளைக்கும் முன்னால் நான்
                             சிறை பிடித்தேன்..
சிறைக்குள்ளே நறுமலராய்
                             பரிணமிததாய்!
இறை கொடை இதுவென நான்
                             கண்டுகொண்டேன்..
பறை கொட்டி என் புகழ் மணக்க
                              இணை நடந்தாய்!

சாய்ந்து விழும் காலமதில்
                              தூணாய் நின்றாய்..
நிலைகுலைந்த பொழுதில் மனம்
                             நிலைக்கச் செய்தாய்.
வீழ்ந்திருப்பேன் விழிபிதிங்கி
                             வாழ்வின் முன்னே...
அமிர்தம் கை வந்ததாலே
                              உடம்பில் நின்றேன்.

உன்னால் நான் என்னால் நீ
                             என்றிருந்தோம்...
பிணங்கி நின்ற பொழுதெல்லாம்
                             வருந்தி நின்றோம்.
வெயிலோன் தன தணல் மறைக்கும்
                             நறு நிழலே,
உள்ளத்தின் கிடப்பெல்லாம்
                             சொல்வதில்லை

வெள்ளத்தில் அழிந்துவிடும் சொந்தமல்ல
          இது
எழுபிறப்பும் தொடர்ந்து வரும் பந்தம்   



Saturday, 23 April 2016

ராம ஆஞ்சநேய யுத்தம்

வால்மீகி இராமயணத்திலோ, கம்ப இராமயணத்திலோ இல்லாமல் பல சம்பவங்கள் ராமாவதாரத்தைப்பற்றி பல மாநிலங்களில் பலவாறாக உலா வருகின்றன. அவை உண்மையா அல்லது புனையப்பட்டவையா நமக்குத் தெரியாது. ஆனால் அவை நமக்கு சொல்லுகின்ற செய்தி இனிமையானது.  அதில் ஒரு சம்பவம் இங்கு தரப்பட்டுள்ளது. இது ஆந்திராவிலும் மற்றும் சில வடமாநிலங்களிலும் சாதாரண மக்கள் மனதிலே பதிந்துபோன சம்பவம்.

அரசன் சகுந்தன், சிறந்த ராமபக்தன். (அது சகுந்தன் அல்ல யயாதி என்போரும் உண்டு. யயாதியின் காலமும், ஸ்ரீராமனின் காலமும் வேறு வேறு.  ஆகையால் இங்கு சகுந்தனையே எடுத்துக்கொள்வோம்)

ஒரு யாக பூஜையின் போது சகுந்தன் வசிஷ்டரை முதலிலும் விஸ்வாமித்திரரை இரண்டாவதுமாக கௌரவித்துவிட்டான். நம்முடைய கலக்கார நாரதருக்கு அல்வா சாப்பிட்டது மாதிரி  ஆகிவிட்டது.

“விஸ்வாமித்திரரே சகுந்தன் வேண்டுமென்றே உம்மை அவமதித்திருக்கிறான்.  இதை எப்படி தாங்கள் பொறுப்பீர்கள்”

கோபமுனிக்கு சூடு தலைக்கேறியது. ராமனிடம் விரைந்தார்;. “ராமா, அந்த சகுந்தனின் தலை பொழுது சாய்வதற்குள் என் காலடியில் விழவேண்டும் என ஆணையிட்டார் ;.”

புராணகால “கொரியா; பாய்” நாரதரும் உடனடியாக இந்த செய்தியை சகுந்தனிடம் தெரிவிக்கிறார் ;.

“ராமன் அவ்வாறு நினைத்தால் நான் என்ன செய்ய முடியும் நாரதரே!
ராமனால் மடிவதுகூட புண்ணியமல்லவா! நடப்பது நடக்கட்டும”; என்றார் ; சகுந்தன்.

“நீ சொல்வதில் தவறில்லை சகுந்தா. இருந்தாலும் ஒரு தவறும் செய்யாத உன்னை இராமன் கொன்றால் அது இராமனுக்கும் இழுக்கு அல்லவா.  அதற்கு நீ காரணமகலாமா”

சகுந்தனுக்கு குழப்பமாயிற்று.

“இதற்கு என்ன தீர்வு நாரதரே”

“ஓரே ஒரு வழிதான் உள்ளது. நீ அஞ்சனாதேவியிடம் சரணடைந்துவிடு.  அவள் உன்னை காப்பாற்றுவாள்.”

சகுந்தன் அஞ்சனாதேவி இருப்பிடம் சென்றடைந்து அவள் பாதங்களை நமஸ்கரித்து தன்னை காத்தருள வேண்டுகிறான்.

அண்டி வந்தவரை காப்பது நமது கலாச்சார கடமையல்லவா!  அஞ்சனாதேவி சம்மதித்து விட்டார் ;.

ராமன்தான் சகுந்தனை எதிர்ப்பவன் என தெரிந்ததும் சிறிது கலக்கமடைகிறாள். இருந்தாலும் தனது மகன்  ஆஞ்சநேயனை அழைக்க, அடுத்த கணம் ஆஞ்சநேயன் தனது நாவில் ராம நாமத்துடன் அங்கு வந்து சேர்கிறான்.

“மகனே, இந்த மன்னன் சகுந்தனுக்கு நான் அடைக்கலம் கொடுத்துவிட்டேன்.  அவனை காக்க வேண்டியது உனது கடமை”

அன்னையின் ஆணை இறைவனின் ஆணையல்லவா. யாரை எதிர்க்க வேண்டும் என்பது அறியாமலே அனுமனும் சம்மதித்துவிடுகிறான்.

இராமன்தான் சகுந்தனின் எதிரி  என அறிந்ததும், கலங்கினாலும் மனம் தளரவில்லை அனுமன். கொடுத்த வாக்கை காக்க வேண்டியது கடமையல்லவா. தனது வாலால் கோட்டை கட்டி சகுந்தனை உள்ளே பாதுகாப்பாக அமரவைக்கிறான்.

சகுந்தனை தேடி வருகின்ற இராமன் இந்த விசித்திர சூழ்நிலையை கண்டு வியக்கின்றான். ஆனால் குருவின் ஆணையாயிற்றே… தனது நண்பன், சேவகன், சகோதரன் என்றெல்லாம் பாராட்டப்பட்ட அனுமனின் கோட்டையை நோக்கி அம்பு மழை பொழிகிறான்.

அதுவரை நடக்காத அதிசயம் அன்று நடந்தது. ராமனின் அம்புகள் சக்தியிழந்து கோட்டையை சுற்றி வந்து கீழே விழுகின்றன.

நேரம் சாய்கிறது.

சூhpயனுக்கு மறைவதா வேண்டாமா என்று தெரியவில்லை. காலச் சூழற்சி ஸ்தம்பிக்கிறது. அனுமனை வீழ்த்த முடியவில்லை.

இராமன் தனது சக்தி வாய்ந்த இராம பாணத்தை எடுத்தான். அனுமன் தனது நெஞ்சை ராமனுக்கு காட்டி நின்றான். ராம பாணம் அனுமனின் நெஞ்சை துளைத்தது. பிளந்த நெஞ்சில் இராமனின் உருவம். இராம பாணம் இராமனில் ஐக்கியமானது.

இந்த விந்தை இராமனுக்கு விளங்கவில்லை.

நாரதா; வந்தார்; இராமனிடம் ‘இராமா உனது அஸ்திர மழையை சற்று நிறுத்திப் பார் ’ என்றார் ;.

எங்கும் நிசப்தம்.

கூப்பிய கரங்களோடு நின்றிருந்த அனுமனின் அதரங்களிலிருந்து உள்ளத்தை உருக்கி ஆன்மாவைத் தொடும் இராம நாம பிரவாகம் இராமனையே மயங்கச் செய்கிறது.

‘இராமா உன்னுடைய நாமத்திற்கு உன்னைவிட சக்தி அதிகம். இந்தப் போரால் இனி பயனில்லை’.

கலக நாயகன் கலகத்தை முடித்து வைக்க அஸ்திவாரம் இடுகிறார் ;.

சூரியனும் சற்று நிம்மதியாக கீழிறங்க தயாராகிறான்.

‘நாரதரே எனது குருவின் ஆணை நிறைவேற்றாமல் என்னால் இருக்க முடியாதே’

“அதில எந்த குழப்பமுமில்லை இராமபிரானே!!.
  தவமுனிவர்  விஸ்வாமித்திரரே வாருங்கள்.!!
    மன்னன் சகுந்தனே வெளியே வா!!.”

அனுமனின் வால்கோட்டை சற்று நெகிழ சகுந்தன் வெளிப்படுகிறான்.

“மன்னா உன் தலை மகரிஷியின் கால்களில் படும்படி நமஸ்காரம் செய்!”

சகுந்தன் ஓடி வந்து மகரிஷி விஸ்வாமித்திரரின் பாதங்களில் தனது தலையை வைத்து வணங்குகிறான். சகுந்தனின் அந்த நாள் வரை செய்த பாவங்கள் மகாரிஷிக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்படுகிறது.

“இராமபிரானே சகுந்தனின் தலை மகாரிஷியின் கால்களில் விழுந்தாயிற்று.  தங்களது கடமை முடிந்தது. சகுந்தனுக்கு ஆசியளியுங்கள்”  கலக முனி கபட சிரிப்புடன் சொல்கிறான்.

சூரிய பகவான் நிம்மதியாக மேற்கே மறைகிறான்.

சட்டமும் மதங்களும்

சமீப காலமாக நீதிமன்றங்கள் அரசியலிலும் மதத்திலும் மூக்கை நுழைக்கின்றன. சமீபத்திலே ஒரு நீதிபதி கூறுகிறார் ; “யார்  வேண்டுமானாலும் தவறிழைக்கலாம், ஜனாதிபதி கூட.. சட்டத்தின் முன் அனைவரும் சமம்’’ உண்மைதான்.  ஆனால் அந்த நீதிபதி அந்த கணம் மறந்தது, நீதிபதி கூட தவறிழைக்கலாம். இல்லையென்றால் கீழ் கோர்ட்டில் தோற்ற வழக்கு மேல்கோர்ட்டில் ஜெயிப்பது எப்படி?

சட்டத்தை தர்மத்தோடு இணைத்து பார்க்கும்பொழது சட்டத்திற்கு ஒரு தார்மீக அந்தஸ்து கிடைக்கிறது. தர்மம் இல்லாத சட்டம் அது அடிபட்ட குருட்டு சிங்கம்போல் ஆகிவிடும்.

நமது நாட்டின் அடிப்படை தர்மசாஸ்திரங்களான, மனு சாஸ்திரம் மற்றும் அர்த்தசாஸ்திரங்கள் நீதிபாரியாலனத்தைப் பற்றி விரிவாக விளக்குகின்றன. அவைகள் மன்னனை நீதியின் உச்சக்கட்ட தலைவராக பார்க்கின்றன. ஆனால் அந்த மன்னனே குணவானாக, பந்த பாசங்களுக்கு பணியாதவனாக, உண்மையுள்ளவனாக, பாரபட்சமில்லாதவனாக, தருமத்தை மதிக்கின்றவனாக இருந்தால் மட்டுமே நீதிபாரிபாலனம் செய்யமுடியும்.

நீதிபாரிபாலனத்தில் கவனிக்கப்பட வேண்டியவைகள் நமது சாஸ்திரங்கள் (1) தர்ம நெறிமுறைகள் (2) சாதாரண சட்டங்கள் (3) நடைமுறை வழக்கங்கள் (4) ராஜ ஆணைகள் (5).

இவற்றில் தர்ம நெறிமுறைகள் சாதாரண சட்டங்களைவிட மதிப்பு வாய்ந்தது. ஆனால் அவற்றை விளங்குவது கடினம் என்பதால் நடைமுறை வழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமே தவிர சட்டங்களை விருப்பமில்லாத சமுதாயம் மீது திணிக்க கூடாது. இது அh;த்தசாஸ்திரம் உரைப்பது.

இன்று இந்து ஆலயங்களில் பெண்கள் நுழைவதை தடை செய்ய முடியாது என்று கூறும் நீதிமன்றங்கள் வசதியாக மறந்துவிடுவது.......

(1) இந்து ஆலயங்களில் மட்டுமல்ல மசூதிகளிலும் பெண்கள் போக முடியாது. இதை சட்டப்படியே கேள்வி கேட்கவும் முடியாது.

(2) எல்லா இந்து கோவில்களிலும் இந்த நடைமுறை இல்லை. சில கோவில்களில் சில சமயங்களில் ஆண்களை அனுமதிப்பதில்லை.

இந்த பிரச்சினைகளை நீதிமன்றம்பால் எடுத்துச் செல்பவாகளும் ஏதோ ஆன்மீக அன்பாகள் அல்ல, விளம்பரம் விரும்பும் வேடதாரிகள்.

ஹிந்து சமுதாயம் மாற்றங்களை என்றுமே வரவேற்பது. இந்த மாற்றமும் நிகழ்ந்தே தீரும். ஆனால் அது சட்டத்தின் வாயிலாக அல்ல. சமுதாய மனமாற்றத்தால் நடக்க வேண்டும், நடக்கும்.

ஒரு கோவில் வாணவேடிக்ககையில் தீ விபத்து ஏற்பட்டால், வாணவேடிக்கையே தடை செய்யும் நீதிமன்றம் வாகனங்களால் விபத்து ஏற்படுவதால் வாகனங்களை தடை செய்யுமா?.

இந்துக்களின் நடைமுறை பழக்கங்களையும், வழிமுறைகளையும் தடைசெய்வதில், கேள்வி கேட்பதில் நீதிமன்றங்களுக்கு அப்படி என்ன அதீத அக்கறை!!!.

சனாதன தர்மம்

சனாதன தர்மம்

நாம் இந்து மதம் என்று சொல்வதைவிட இந்து தர்மம், சனாதன தர்மம் என்று சொல்வதையே விரும்புகிறோம். தர்மம், வாழ்க்கை முறை:  மதம் என்ற சொற்றொடா; நாம் முன்பு எண்ணியதில்லை.

மதம் ஒரு வழிபாட்டு முறை மட்டுமே. வழிபாட்டு முறை வேறு: வாழ்க்கை வேறு என்பது, கிறிஸ்தவம் பிரபலம் ஆனபின் வந்த கோட்பாடு.

நாம் இரண்டையும் பிரித்துப் பார்ப்பதில்லை. அதனால்தான் குறுகிய அர்த்தமுள்ள மதம் என்ற பதத்தை நமது ஆதி அந்தமில்லா சனாதன தர்மத்திற்கு இணையாகக் கொள்ள முடியாது.

தர்மம் மனிதனை ஒன்று சேர்க்கும். மதம் வேறுபாடு உடையது  அது மனிதனைப் பிரிக்கும். கிறிஸ்தவ, இஸ்லாம், ஹிந்து  தர்மம் மூன்றுமே மக்களுக்கு மோட்சத்தை அடையும் வழியைப் பற்றி சொல்கின்றன.

கிறிஸ்தவமும், இஸ்லாமும் அனைவரும் மோட்ஷம் அடையலாம் என்று சொல்கின்றன: ஆனால் அதற்கு மக்கள் அந்த மதங்களையே பின்பற்ற வேண்டுமென கட்டுபாடு விதிக்கின்றன.

இந்து தர்மம் எந்த மதத்தவரும் மதம் மாறமலே மோட்ஷம் அடையலாம் என்று கூறுகிறது.

 “மதம் ஏதாயாலும் மனிதன் நன்னாயால் மதி”  என்று சொன்ன நாராயண  குரு இந்த தர்மத்தின் பிரதிநிதி: இந்து தர்மத்தின் பிரதிநிதி..

சிந்திக்க தெரிந்தவா;களுக்கு இவற்றில் எந்த வழி உலகத்துவமானது என்பது புரி யும்.

குடியுரிமையா? அல்லது மனித உரிமையா எது பெரியது என்று கேட்டால் எந்த சாதாரண மனிதனுக்கும் அது மனித உரிமையே என்ற பதில் தெரியும். மனித உரிமை எல்லைகளை கடந்து நிற்பது  அதுபோல இந்து தர்மம் எல்லைகளை கடந்தது.

மனிதன் மனிதனாக வாழ்ந்து தெய்வமாக மாறும் வழிகளை போதித்து உலக அமைதியை நிலைநாட்டுவதே தர்மம். ஒவ்வொரு நிலையிலும் ஒருவா; எப்படி வாழ வேண்டும் என்பதை விளக்க, சாமான்ய , ராஜ , சமாஜ என தர்மம் பலவகையாக பிரிகின்றது.

ஒரு முனிவா; கடும் தவம் இருந்து சித்திகள் பல பெற்றார்;. ஒருநாள் அவா; தியானத்தில் இருக்கும்பொழுது கொக்கு ஒன்று அவா; மீது எச்சம் போட்டுவிட்டது.  கண்விழித்து பார்த்த முனிவா; கொக்கை கோபத்துடன பார்த்தார்;, அது எரிந்து சாம்பலாகி விழுந்தது.

 மிகப்பெரிய சக்தி பெற்றுவிட்ட இறுமாப்பில் அவா; தெருவீதிகளில் நடந்து ஒரு வீட்டின் முன் பிச்சைக்காக நின்றார்;. அந்த வீட்டுப் பெண்மணியோ இவரை சிறிது நேரம் காத்திருக்க செய்துவிட்டு தனது கணவருக்கு வேண்டிய பணிவிடைகளை செய்துவிட்டு முனிவருக்கு  அமுது படைக்க வந்தார்;.

சித்தருக்கோ காக்க வைத்ததில் கடும்கோபம். ஓன்றும் பேசாமல் முறைத்துப் பார்த்தார்;. அந்த குலமகள் சிரித்துக் கொண்டே கேட்டார் ;. ‘‘கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா.! என்னை நீ எரிக்க முடியாது.’’

முனிவருக்கோ மிகுந்த ஆச்சரியம். தனது யோக சக்தி செயல்படாதது மட்டுமல்ல இந்த பெண்ணுக்கு என் மனதை வாசிக்கவும் முடிகிறதே எப்படி? என்று யோசித்தார் ;.

‘‘நான் தவம் செய்யவில்லை. வேதங்கள் படிக்கவுமில்லை. என் கடமைகளை தவறாமல் செய்கிறேன். அத்தனை யோக சித்திகளும் என்னை தேடி வருகின்றன. இதற்கு மேலும் இதைப்பற்றி தெரிய வேண்டுமானால் பக்கத்து ஊh; சந்தையில் இறைச்சி விற்கும் “வியாதன்” ஐ போய்ப் பார்;’’,; என்றாள்.

தனது பெருமைக்கு இழுக்காக பட்டாலும், இந்த சித்துகளை பற்றி முழுமையாக தெரிய வேண்டுமே, அதற்காக முனிவரும் சென்றார் ;. இறைச்சியை துண்டு துண்டாக வெட்டி எடை போட்டு, பேரம் பேசி வியாபாரம் செய்யும் வியாதன் முன் அருவருப்போடு சென்றாh;. ‘‘பக்கத்து ஊh; பெண்மணி அனுப்பினார் ; தானே. சற்று அமருங்கள். இதோ, வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லலாம்’’; எனக் கூறி வியாதனும் காக்க வைத்தார் ;. பாவம், முனிவருக்கு ஒன்றும் விளங்கவில்லை!

வீட்டிற்கு சென்றதும் அவரது பெற்றோருக்கு பணிவிடைகள் செய்து விட்டு, காத்திருந்த முனிவரிடம் வந்தார்;. முனிவரும் பல ஆன்மா பற்றிய சந்தேகங்கள் கேட்க அதற்கு அவா; அளித்த பதில்கள் மகாபாரத்தில் வியாத கீதை  என்று உரைக்கப்படுகிறது.

‘‘இத்தனை தெரிந்தவா;, இந்த தொழில் செய்யலாமா?’’ இது முனிவா;.

“ஐயா எந்த தொழிலிலும் தவறில்லை. நான் பற்றில்லாமல் ; கடமைகளை
செய்கிறேன். நான் தவம் செய்வதில்லை. சடங்குகள் செய்வதில்லை.  ஞானம், என்னுள்ளே தானாக புகுந்து கொள்கிறது’’, என்றாh;.

இதுதான் தர்மம், இங்கு மதத்தை பார்க்க முடியவில்லை.

ஜென்ம விரோதிகளான அசுரர்களும் தேவர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் அமுதை திரட்ட முடியும். ‘இது ஒற்றுமையின் பலம்’ என்பதை போதிக்கிறது தர்மம்.

சமுதாய நன்மைக்காக காரியங்களை செய்வதே தர்மம் என்பதை மோகினி அவதாரம் போதிக்கின்றது.

தர்மத்தின் படி நாம் நடந்தால் தருமம் நம்மைக் காக்கும் என்பது நமது தர்மம் நமக்குப் போதித்த பால பாடம். சங்கரா; சொல்கிறாh;, ‘‘எது சமுதாயத்திற்கும், உலகிற்கும் நன்மை பயப்பதாக அமையுமோ அது தர்மம்’’, என்று. இதைத்தான் வள்ளுவா;,
  “வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
       தீமை இலாத சொலல்”       என்று கூறுகிறாh;.

சத்தியம் உலகை தாங்கி நிற்பது. அந்த சத்தியம் படி நடப்பதே தர்மம் இந்த தர்மத்தில் பகையில்லை, கொடுமைகளில்லை துக்கமில்லை.

இந்த தர்மமே இந்து தர்மம். நமக்குள்ளே பல மதங்கள் உண்டு.  சாக்தம், கௌமாரம், காணபத்தியம், சைவம், வைணவம் இன்னும் பல.

ஆனால் தர்மம் ஒன்று: அதுவே, சனாதன தர்மம்.

அழியாத, அழிக்க முடியாத, அழியக்கூடாத .தர்மம் 

காரணம் இது அழிந்துவிட்டால் உலகு அழிந்துவிடும்.

அஹம் பிரம்மாஸ்மி - நான் கடவுள்--2

வேதங்கள் சொல்வது, ‘நான் வேறு கடவுள் வேறு அல்ல, நானே கடவுள்’. அதனால்தான் சுவாமி விவேகானந்தார் ; “மனிதனை பாவி என்று அழைப்பதே பாவம்!  மனிதர்கள் அழிவில்லாத அமிர்தத்தின்; புதல்வர்கள்” என்றார்;.

ஆனால், ‘நான் கடவுள். ஆகவே நான் கொலையும் செய்வேன். கொள்ளையும் அடிப்பேன். நானே எனது நியதிகளை உருவாக்குவேன்’, என்று சொன்னால் அது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விதண்டாவாதம்.

ஒரு மாணவன், டாக்டராக, இன்ஜினியராக, பண்டிதராக, மந்திரியாக, கலெக்டராக எதுவாக வேண்டுமனாலும் ஆகலாம். அவன் ஒவ்வொரு நிலையாக, தன்னுடைய முயற்சியில் தாண்டி, அவனது இலக்கை அடையலாம். அப்பொழுது அவன் கூறலாம். “நான் கலெக்டர்" என்று. ஆனால் எந்த முயற்சியும் எடுக்காமல் நான் கலெக்டர் என்று கூறுவது அறிவிலித்தனமாகத்தான் படும்.

இது, ஒன்றோ, பலவோ, ஜென்மங்கள் பயணித்து முடிகின்ற பயணம்!. இதற்காக நம் மனது, தன் முயற்ச்சியில், ஒவ்வொரு நிலையாகத் தாண்டி வர வேண்டும்.

நம் மனதின் முதல் நிலை, நாம் இருப்பதையே அறியாத நிலை. மயங்கிய அல்லது தூங்குகின்ற நிலை. பிறந்த குழந்தையின் நிலை. நான் உறங்குகிறேன். என் மனம், உடம்பு அத்தனையும் உறங்குகிறது. “துஞ்சினாh; செத்தாரில் வேறிலர் ”. விழிக்கும் வரை நானில்லை. இதுவே பிரக்ஞா அல்லது ஸ்ஷீப்தி நிலை என்பர்
.
இரண்டாவது நிலை: இதை ஸ்வப்ன நிலை அல்லது தைஜஸ நிலை என்பர் . அரை மயக்க நிலை. இளம் தூக்க நிலை. நான் கனவுலகில் சஞ்சாரிக்கிறேன். என் உடல், என்னைச் சுற்றியுள்ள காட்சிகள் அனைத்தும் மாயையென்றாலும் எனக்கு அக்கணத்தில் உண்மையாக தெரிகிறது.  நிஜம் எது? நிழல் எது? தெரியாத நிலை.

மூன்றாவது நிலை. “ஜாக்ரத்” அல்லது “வைஷ்வாரை” நிலை. நாம் நிஜம் என்று இன்று விழிப்புடன் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த மாய உலகத்தில் உண்மையாக வாழந்து கொண்டிருக்கும் நிலை. நமது உயர்ந்த, அமரத்துவ  நிலை தெரியாத, அறியாத, உணராத நிலை.   நம் அனைவரது இன்றைய நிலை இதுதான். நாம், மனம், உடம்பு, இந்திரியங்கள் இவற்றின் கூட்டாக வாழ்கின்ற நிலை. நமது  கர்மாக்கள் நமது நிலையை ஆட்டுவிக்கின்ற வாழ்க்கை.

எனக்கு ஒரு பெயர் ஒரு வடிவம், ஒரு அடையாளம் என கற்பித்து, உலகினின்று என்னை வேறுபடுத்தி காட்டி என் தனித்தன்மையை நான் நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் நிலை.  வேதங்கள் இதை இரவென்றும், சராசரி மனிதா;கள் இதையே பகலென்றும் எண்ணி வாழ்கின்ற வாழ்க்கை.  இதுவே த்வைத நிலை. என்னையும் இறைவனையும் வேறுபடுத்தி காண்கின்ற ஒரு சாதாரண மனிதனின் நிலை.

பெரும்பாலான மதங்கள் இந்த நிலையிலேயே மனிதனை பிடித்து வைத்துள்ளன. இதையும் மீறி அடுத்தடுத்த நிலைகளுக்கு சென்று இறைவனோடு கலந்தவா;கள் நம் ரிஷிகள், முனிவர்கள்.

நான்காவது நிலை ஆத்ம நிலை. நான் இருப்பதை உணர்கிறேன். நானே அந்த பரப்பிரம்மத்தின் அங்கமாகவும் உணர்கிறேன். என்னுடைய நிலையை, இவ்வுலக நிலைக்கும், இறைஅநுபூதிக்கும் என்னால் மாற்றமுடியும். நான் இவ்வுலக பந்தங்களிலிருந்து, விருப்பு, வெறுப்புகளிலிருந்து விடுபட்டு விட்டேன். நான் நானாக இருக்கிறேன். மற்றவர்களின் உறவுமுறைகள் என்னைப் பாதிப்பதில்லை. நானே ஆத்மாவாக உணர்கிறேன்.
மற்றவர்களையும் ஆன்மாவின் உருவமாக பார்க்கிறேன்.

ஆதிசங்கரருக்கு புலையனாக வந்து சிவபெருமான் போதித்தஞானம் இதுதான்.

இதுதான்.கடைசி நிலை நானே கடவுளாக பிரம்மமாக மாறுகின்ற தூய நிலை, ‘துரிய நிலை’. நான் வேறு, பிரம்மம் வேறாக தெரிவதில்லை. அத்வைதத்தை உண்மையாக, பூரணமாக அனுபவிக்கின்ற நிலை.
நான் உறங்குபவனும் இல்லை. விழிப்பவனும் இல்லை.
நான் வெளித்தோற்றமும், பேச்சும் இல்லை.
நான் ஆழ்மன உள் சிந்தனையும், உருவகமும் இல்லை.
நான் ஆணுமில்லை, பெண்ணு மில்லை, அலியுமில்லை.
என்னைத் தவிர எதுவுமில்லை.
நானே எல்லாம்.  எல்லாம் நானே.
நானே கடவுள்.


அண்ணாச்சி கடை

அது எங்கள் உலகத்தின் பொழுது போக்கு பூங்கா.  அண்ணாச்சிக் கடை என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் எங்கள் “ வால் மார்ட்”.   குண்டூசி முதல் உழுந்தம் பருப்பு வரை, துடைப்பக்கட்டை முதல் குளியல்சோப் வரை என எல்லாம் கிடைக்கும் அங்காடி.  அண்ணாச்சிக்கு தனி ஏஜென்சி கிடையாது. அதனால் எல்லாவித சாதனங்களும் தடையின்றி கிடைக்கும்.
 அரைக்கிலோ கடலை வாங்குபவன் 100கிராம் கடலையை சுவைபார்க்க என்றே விழுங்கி விடுவான்.  அண்ணாச்சி அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதில்லை.

இரவு வந்துவிட்டால் ஒரு சில மங்கல் பல்புகளே கடையை அடையாளம் காட்டும். கல்யாண வீட்டிலே தட்டுபாடு என்றால் இரவு 12 மணிக்கும், விடுமுறை நாளென்றாலும் டார்ச எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார்  கடையைத் திறக்க.

அதிகம் வாங்குகின்ற பண்ணையாருக்கு சாதாரண விலையும், அன்றாடம் காய்ச்சிக்கு தள்ளுபடி விலையிலும் சாதனம் தருவது அண்ணாச்சியின் சிறப்பம்சம்.

ஒருநாள் கூட அண்ணாச்சி தனது கடைக்கு வந்து பொருள் வாங்குங்கள என்று சிபாரிசு செய்து அழைத்ததில்லை. வியாபாரம் கூடுவதைப் பற்றியோ   குறைவதைப் பற்றியோ கவலைப்படுவதில்லை.

கடைசியாக வாங்கிய ரேடியோ பெட்டிதான் அண்ணாச்சி கடையின் விசேஷ கவர் ச்சிப் பொருள்.

தரத்தில் குறைந்த பொருளையோ எடைகுறைந்த எடைக் கற்களோ அண்ணாச்சி கடையில் இருந்ததில்லை என்பது அத்தனை கிராமங்களும் அறியும்.

திடீரென கிராமம் நகரமானது................................  

அண்ணாச்சி கடைக்கு போட்டியாக பல கடைகள் வந்தன.
கலா; குமிழ் விளக்குகளும் டி.வி. பெட்டிகளும் அழகு காட்டின.
அழகாக ஆடையுடுத்திய பெண்கள் அலங்காரச் சிரிப்போடு வரவேற்றனா;.
 இளைஞா; பட்டாளம் புதிய கடையை பார்க்க அலைமோதியது.
 புதிய கடைகள் புதிது புதிதாக முளைத்தன

“வியாதியஸ்தருக்கான நல்லெண்ணெய் எனது கடையில் என ஒருவா; கூவ,
மனமகிழ, இளைப்பாற, எனது கடை என மற்றவா; கூவ

பூலோகத்தில் சொர்க்கத்தை காட்டுகிறார்கள் என கூட்டம் அலைமோதியது.

நான் நீ என போட்டி போட்டு விளம்பரங்கள்.

புதிது புதிதாக இலவசங்கள். 5 ரூபாய் வாங்கினால் 10ரூபாய் இலவசம்.

யாரும் இது எப்படி சாத்தியம் என கேட்கவில்லை. தேவையோ இல்லையோ கடை களில் கூட்டம் மொய்த்தது.

‘அண்ணாச்சி இத்தனை நாள் நமக்காக ஏதாவது செய்தாரா இவர்களைப் போல,’ என அங்கலாய்த்தது.

நமது பணம் தானே கரைகிறது என யாரும் கவலைப்படவில்லை. தரம், எடை, கனிவு பாரிவு உலகிலே பறந்தது.

தரத்தைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. கடலை சுவைக்கமுடியாதபடி பாக்கெட்டில் அடைபட்டது, யாருக்கும் தொரியவில்லை.

பண்ணையாருக்குத் தள்ளுபடியும், அன்றாடம் காய்ச்சிக்கு அதிக விலையும் யாருக்கும் உறுத்தவில்லை.

கடைக்கு எதற்கு அலங்காரம். இந்த அலங்காரத்திற்கும் சேர்த்துத் தானே நாம் கொடுக்க வேண்டும் என யாரும் எண்ணவில்லை.

மயக்கம், பகட்டு, ஏமாற்று, பித்தலாட்டம் கொடிகட்டிப் பறந்தது.

அண்ணாச்சி கடையை திறக்க வேண்டுமா, வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார்  - கவலையோடு.

கவலை, அவரது வியாபாரம் படுத்துவிட்டதே என்பதற்காக அல்ல.!!
மக்கள் இப்படி ஏமாறுகின்றார்களே என்றுதான் அவர மனம் பதைபதைத்தது.    

பின் குறிப்பு:  

இந்தக் கதைக்கும் இன்று நமது நாட்டில் நடந்துவரும் மத மாற்றங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.



பஜகோவிந்தம்

கண்ணனை நாடிடு கண்ணனை நாடிடு
    கண்ணனை நாடிடு, அறிவிலா மனமே
காலன் வந்து கைதொழும் போது
    இலக்கண இலக்கியம் துணையிலை மனமே!
 
பெரும் பொருள் வேண்டி, சத்தியம் மறந்து
    இரவோடு பகலாய் மயங்குதல் ஏனோ?
கிடைத்ததே நன்று, செல்வம் இதன்று:
    கண்ணனின் அன்பை எண்ணுதல் நன்று... (கண்ணனை ….

மங்கையை கண்டு, காமத்தில் வெந்து
    இரத்தமும் சதையும் இன்பெனக் கொண்டு
மோகக் கடலில், மூழ்கி மூச்சிறைந்து
    கிடைத்திடாப் பிறவி வீழ்த்துதல் நன்றோ?       (கண்ணனை....

நிலையிலா வாழ்க்கை எண்ணிடு மனமே
    தாமரை இலையின்  நீர் த்துளிதானே!
நோயும், பகையும், ஆசையும் கர்வமும்
    காலனின் தூதாய் அழைத்திடுமாமே!    (கண்ணனை….

இளமையும் வனப்பும் செல்வமும் சேர,
    சுற்றமும் நடபும் பிள்ளையும் அருகே:
கால்கள் தளா;ந்து கண்கள் மயங்கி
    உடல் விழும்போது உறவுகள் எங்கோ?  (கண்ணனை....

என்புதோல் போர்த்திய எழில்மிகு பாண்டம்
   கண்டவரெல்லாம் களித்திடும் தோற்றம்
மூச்சு மறந்து பிணமென மயங்க
    கொண்டவள் தானும் அஞ்சிடுவாளே!    (கண்ணனை …

கூடி களிப்பில் குழந்தை மறந்தான்…
    போகக் களிப்பில் இளைஞன் நினையான்..
கழிந்தன எண்ணி முதுமையில் வாட,
    கண்ணனை எண்ணிட காலமெதாதோ?   (கண்ணனை ….

மனைவியும் யாரோ!   மக்களும் யாரோ!
    சுற்றமும் நட்பும் நீயுந்தான் யாரோ!
வந்தது எங்கே!  போவது எங்கோ?
    கானல்நீர் வாழ்வை நிலையென நினைந்தாய்…(கண்ணனை...

இரவும் பகலும் நிலையிலை மாறும்
    வசந்தம், கோடை வரும், இனி மாறும்
மாயவலையில் வீழ்ந்தவர் தமக்கு
    மாறா ஆசை, மறைவதும் கூடுமோ?   (கண்ணனை...

யௌவனம் மறைந்தால் மோகமும் யாது!
    வற்றிய குளத்தால் வரும்பயன் யாது!
நல்லவர் கூடி மாயை அறுந்தால்
    பந்தமகன்று ஞானமும் மலரும்!

கண்ணனை நாடிடு
   கண்ணனை நாடிடு
    கண்ணனை நாடிடு,
       அறிவிலா மனமே

Thursday, 21 April 2016

இந்துத்வா


   இந்துத்வா என்பது பலர் நினைப்பது போல் ஒரு மதம் அல்ல.  மதம் என்ற சதாரண சொல் குறிப்பிடுவது ஒரு மதத்தலைவனையும் அதன் வழிபாட்டு முறையையுமே. நாம் இந்துத்வா என குறிப்பிடுவது ஒரு மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகள்.

  சத்தியத்தை தேடி பயணிக்கிற எவரும் அவா; கிறிஸ்தவராகவோ, முஸ்லீமாகவோ இருந்தால் கூட அவா; இந்துதான்.

   இந்துத்வா ரிஷிகள் முனிவர் களின் ஆராய்ச்சியில், ஞான திருஷடியில் சுயநலம் பாராத உழைப்பில் வெளிப்பட்ட ஞான களஞ்சியங்கள். காலத்தில் அழியாது தலைமுறை தலைமுறை தாண்டி நம்மிடம் வந்து சேரநதுள்ளது. இதைப் போற்ற வேண்டியது, பாதுகாக்க வேண்டியது நமது கடமை
.
  அறிவில்லாத சில அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி தனக்கும், தன் குடும்பத்திற்கும், தனது தோழிக்கும், உடன் பிறப்புகளுக்கும் வளம் சேரப்பதற்காக இதை மதவாதம் என்று கூறுகிறாh;கள். இவர்கள் தங்களது சந்ததிக்கும் நல்லதை செய்யவில்லை, பாவத்தையே சேர்க்கிறாh;கள்.

  ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான நிரஞ்சன் ஒரு நாள் படகில் வருகிறார். அப்போது உடனிருப்பவர்கள் குருதேவரை இழிவாக பேசுகிறார்கள். நிரஞ்சன் ஆத்திரமடைகிறார். 'இப்போது நீங்கள் நிறுத்தவில்லை என்றால் இதோ படகையே கங்கை பிரவாகத்தில் மூழ்கடித்து விடுவேன்.’ என கூறுகிறார். இது ஸ்ரீராமகிருஷ் ணருக்கு தெரியவந்து, நிரஞ்சனை கடிந்து கொண்டார். ஆனால் யோகின் எனும் சீடருக்கு இதே அனுபவம் ஏற்பட்டது. படகில் சிலர் ஸ்ரீராமகிருஷ்ணர் குறித்து அவதூறுகள் பேசினர். யோகின் எதுவும் செய்யவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தார். பேசாமல் கரையிறங்கி குருதேவரிடம் வந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்னார், “உன் குருவை அவமதிப்பதை கேட்டுக்கொண்டு நீ சும்மா இருந்திருக்க கூடாது.’’

  கண்மூடி இருக்கலாம், அவதூறுகள் மறைந்துவிடும்; என்கிற நிலைபாடும், வன்முறையால் அவற்றை அடக்கிவிடலாம் என்பதும் சரியான அணுகுமுறை அல்ல. மாறாக ஞானத்துடன் உண்மையை உரக்க சொல்வதும் எந்த அவதூறையும் தர்மத்தை மேலும் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லும் வழியாக மாற்றுவதுமே அவதூறுகளை எதிர்கொள்வதில் ஹிந்துவின் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

  அஹிம்சை வீரர்களுக்கே உரியது.

இது அன்பு வழி


       - ஆதாரம் ஈராகி நியுஸ், Nov 3 – 2014 (e-news

   குர் திஸ் - குர் திஸ்hதான் பகுதியை சார் ந்த பழமையான இன மக்கள். குர் திஸ்தான் பகுதி இன்றைய ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளில் பரவி இருந்தது. ஈராக்கின் சில பகுதிகளில் பெரும்பான்மையாகவும், மற்ற நாடுகளில் சிறுபான்மையினராகவும் இன்று வசித்து வருகிறார்கள். உலகம் முழுவதிலுமாக கிட்டத்தட்ட 5 கோடி குர்திஸ் மக்கள் உள்ளனா;.

   ஈராக் அரசுக்கும் குர்திஸ் இன மக்களுக்கும் பல ஆண்டுகளாக தொடர்ந்து சில மோதல்கள் நடந்து கொண்டிருந்தாலும் 1975–78 இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 2 இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனா;.  1986–88 வரை நடந்த மகப் பெரிய தாக்குதல்களில் 1,82,000 குர்திஸ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனா;. 1991 – ல் 15 இலட்சம் மக்கள் நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு குடி பெயர்ந்தனா;. அதில் கிட்டத்தட்ட 20,000 போ; போகின்ற வழியிலே இறந்தார் . முடிவில் 1992-ல் குர்திஸ் மக்கள் ஈராக்கின் ஒரு பகுதியில் தனிநாடு அமைத்துக் கொண்டனா;. 2007-ல் இருந்து இன்றுவரை அவர்கள் மீது மீண்டும் தொடர் தாக்குதல் நடந்து வருகிறது.

   இன்று பெரும்பான்மை குர்திஸ் மக்கள் முஸ்லிமாக இருந்தாலும் (சன்னி முஸ்லீம்) இன்றும் கிட்டத்தட்ட 5 லட்சம் போ; அவர்களின் பழமையான “யாசிழ்” மதத்தில் இருந்து வருகின்றனா;.  அந்த மதம் கிட்டத்தட்ட இந்து மத நம்பிக்கைகளையும், வழி முறைகளையும் கொண்டது. (சிலா; கிறித்தவர்களாகவும் மதம் மாறியுள்ளனா;). இறைவனோடு ஐக்கியமாவதற்கு பலமுறை பிறவி எடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை உடையவா;கள் அவர்கள்.

   அவர்கள் பிசாசை வணங்குபவர்கள் என்று மற்ற முஸ்லீம்களும், கிறிஸ்தவர் களும் பழிப்பதும் உண்டு. அவர் களது பிரார்த்தனை சூரியனை பார்த்தே இருக்கும். ஏவாளின் துணையில்லாமல் ஆதாமிலிருந்து பிறந்து இனம் தங்களது இனம் என்பது அவர்களது நம்பிக்கை.

   இப்படி ஒரு மாறுபட்ட இனம் “உலக சமாதானத்தை” விரும்பும் தங்கள் மத்தியில் இருக்க முடியுமா? என சிந்தித்தனா; இஸ்லாமிய தீவிரவாதிகள். அதன் விளைவுதான் இன்று ஈராக்கில் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலை.

   இந்த இன மக்கள் அனைவரும் சன்னி முஸ்லிமாக மாறவேண்டும். அல்லது கொலை செய்யப்படுவா; என மிரட்டல் விடுத்துள்ளனா;. பலா; கொல்லப்பட்டும விட்டனா;. பலர் மலைகளில் ஒளிந்துள்ளனா;. 5-8-2014 –ல் வெளியான தகவல்படி 50000 யாசிழ்கள் மலைகளிலும் காடுகளிலும் உணவின்றி மாட்டியுள்ளனா;. பலா; அடிமையாக மாற்றப்பட்டு விற்கப்பட்டு இருக்கின்றனா;.

   இந்த தீவிரவாதத்தை கண்டு உலகமே மிரண்டு போயுள்ளது. 1SIS (Islamic state of Irag & Syria என்பது அங்கீகரிக்கப்படாத “சன்னி” முஸ்லீம் தீவரவாத அமைப்பு. இது அல் கொய்தாவின் முன் தோன்றல்.

   ஈராக்கில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ள 1SIS தீவிரவாதிகள் அவர்களின் வன்முறையால் அனாதையாக்கப்பட்ட யாசிழ் மற்றும் கிறித்தவப் பெண்களை மற்ற நாட்டை சாh;ந்தவர்களுக்கு விற்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு முக்கிய வருமானம். அப்படி விற்கப்படும் பெண்களுக்கு ஒரு விலையும் நிர்ணயம் செய்துள்ளனா;.
40 முதல் 50 வயதிற்குள்  -   50,000 தினார்
30 முதல் 40 வயதிற்குள்  -   75,000 தினார்
20 முதல் 30 வயதிற்குள்  -  1,00,000 தினார்
10 முதல் 20 வயதிற்குள்  -  1,50,000 தினார்
1  முதல் 9 வயதிற்குள்  -  2,00,000 தினார் 

ஓன்றுமில்லை

                   
‘சிம்மி சிம்மி மின்னி சிணுங்கின்ன மின்மினி கண் எனக்கு’.

ஆடி வரும் அழகிலே அகிலமும் தவித்ததாம்.
ஆறடி உயரம் ஆஜானுபாவம்:
வாலிபச் செருக்கிலே நிமிர்ந்த தலை குனியவில்லை....

ஓடி உழைத்ததில் உருவமும் சிதைந்தது:
முதுகும் வளைந்தது:  தலையில் வயிரம் விளைந்தது.
ஓய்ந்து படுக்கையில் எழுப்பவோ யாருமில்லை!!
தூக்கி எரித்தனா;.......  கடலிலே கரைத்தனா;....

மயக்கிய விழிகளும், மிரட்டிய மொழிகளும் எங்கோ போயின.
வந்த வழி தெரியவில்லை: போனதுவும் புரியவில்லை.

எது இருந்தது?. இன்று எது போயிற்று?
அது போனதும் ஏன் எல்லாம் போயிற்று??
எல்லாமாய் இருந்தது என்னுள் புகுந்தது!.
எல்லாமாய் இருந்தது என்னுள்ளும் இருந்தது!.

எதையும் புரியாமல் அதனை எனதென்று எண்ணினேன்.
என்னுள் புகுந்தது எல்லாமாய் மறைந்தது.
      ஓன்றும் எனதில்லை.    
         எல்லாம் எனதே தான்..

             பூஜ்யத்துக்குள் ஒரு ராஜ்ஜியம

கள்ளுண்ட மயக்கத்திலா என்னைப் பிரித்தாய்

இல்லாத இருள் இருந்து  
   ஒளியுலகில் வீழ்ந்து விட்டேன்
பொல்லாத பிறவியிது    
   போய்வொழிவது எக்காலம்!!

அன்னை என்பர் ; தந்தை என்பர் 
   மாமன் என்பர்  மாமி என்பர்
இன்ன இன்ன சொல்லறியா  
   வந்துதித்த சொந்த பந்தம்
உள்ளுக்குள் வெந்தொழிந்து  
   வெளியுலகில் (முகத்) திரையுமிட்டு
தெள்ளு தனி சிரிப்பதனை  
   தவறாமல் இறைத்துவிட்டு
நடிக்கின்றோம் பாரினிலே
   திரை மறைக்கும் வேளைவரை
மடிக்கின்ற திரையுமங்கு
   நீட்டிவிட்டால் உறவுமெங்கே!!!

நகமென்றும் சதையென்றும்
   கண்னென்றும் விழியென்றும்
யுகயுகமாய் நிலைக்குமென்று
   உவந்திட்ட பந்தமெல்லாம்
சில நிமிட மந்திரத்தில்
   பூஜ் ஜி யமாய் போகுமென்றால்
வலைபின்னி முச்சணைக்கும்
   உறவுகளே மறைந்திடுங்கள்

வந்துவிட்டேன் இப்புவியில்
   வாழ்ந்துவிட்டேன் புதைமணலில்
வெந்து உடல் வேகுமுன்னே
   ஒன்று மட்டும் உரைத்துவிடு

உள்கடந்த ஞானியனே
   உன்னில் நான்
       கரைவதுவே
வெளிவிழுந்த பிறவிப்பயன்
   என்றுரைப்பர்
      மதிமிகுந்தோர்

உள்ளும் புரியவில்லை
   புறமும் தொரியவில்லை
உன்னுள் மறைவதுதான்
   உண்மை முக்தியென்றால்
கள்ளுண்ட மயக்கத்திலா
   என்னைப் பிரித்தாய்
        உன்னிலிருந்து




இந்து சமுதாயத்தில் மற்ற மதங்களை போல் உள்ள கட்டுக்கோப்பான அதாவது ஆயர் போன்ற அமைப்பு உருவாகாதது ஏன்?

  

இந்து மதம் தனி மனித மேம்பாட்டையும் ஒழுக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது. தனி மனிதன் சமுதாயத்திற்காக உழைத்து சமுதாயத்தோடு இணைவது நமது பண்பாடு. மற்ற மதங்கள் ஒரு அமைப்பாக இருந்து மனிதனை காப்பாற்றுபவை. ஆக மற்ற மத அமைப்புகள் ஆன்மீகத்தை வியாபாரமாக மாற்றுகின்றன. நமது அமைப்பு மனிதனை தெய்வமாக மாற்றும்.

   இந்த அடிப்படை வேறுபாட்டினால்தான் இந்து மதத்தில் மற்ற மதங்களைப்போன்ற கட்டுக்கோப்பான அமைப்புகள் இல்லை. இருந்தாலும் காலத்தின் கட்டாயம் காரணமாக பல சூழ்நிலைகளில் அத்தகைய அமைப்புகள் உருவாகியுள்ளன. அவைகளின் தேவைகளுக்கேற்ப அவை வளரவோ, மங்கவோ செய்யும். அந்த அந்த அமைப்புகளில் அந்த அந்த  காலகட்டங்களில் நாமும் நம்மை இணைத்துக் கொண்டால் இந்த பண்பாடு சிதையாமல் காக்கப்படும். 

Wednesday, 20 April 2016

நெஞ்சு பொறுக்குதிலையே

  கோப்பெருஞ்சோழன் பெருமூச்சு விட்டு சொல்கிறான் “யானோ மன்னன்? யானே கள்வன்” மரணத்தை விரும்பியழைத்து வீழ்கிறான். அவசரத்தில் ‘பிழைத்து’ விட்ட மன்னனின் கட்டளைக்கு மரணதேவனும் கட்டுப்பட்டு மன்னன் பிழைக்காமல் பார்த்துக் கொள்கிறான்.

  விபத்திலே மாண்ட கன்றுக் குட்டியின் தாய் விபரமறியாது விபத்தாக கயிற்றில் படர்நத கொடியை பற்ற (யாருமே அதை உபயோகிக்கவில்லை: ஆதலால், அந்த ஆராய்ச்சி மணியின் கயிற்றில் பற்றி படர்ந்திருந்தது ஒரு பச்சைக் கொடி) விபத்தாக மணியும் அடிக்க, சாக்குச் சொல்லி மகனை காப்பாற்ற அறியாத மன்னனோ மகனை தேர்க்காலில் இட்டு, கொல்கிறான்.

  இது நமது தமிழ் வேதங்கள் பறைசாற்றும் சாஸ்திரங்கள். ‘தமிழ் வாழ்க’ என்று எழுதிவிட்டு தமிழனின் வீரத்தையும் தீரத்தையும் நியாயத்தையும் மறந்து விட்டோம்.

  இன்று நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது நீதி மன்றத்தில் மட்டுமல்ல: மக்கள் மன்றத்திலும் தான். நீதி தன் கடமையை செய்வதைக் கூட பழிவாங்குவதாகவும், அதற்கு கிடைக்கின்ற சிறைவாசத்தை ஏதோ சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தையும் மிஞ்சுவது போல் சித்தரிப்பதைப் பார்த்தால், மக்கள் மனது என்ன பேதலித்துவிட்டதா! எனத் தோன்றுகிறது.  இல்லையென்றால் இந்த கூத்துக்களை அரங்கேற்றுபவர்களை அன்றைய கலிங்கத்து போர்மரபிலே சிரம் கொய்திருக்க வேண்டாமா? முக்காடு போட்டு தொங்க வேண்டிய தலைகள் இன்று வீரத் திலகமிட்டு வலம் வருவது வேடிக்கையல்லவா.

  5-ம், 10-ம் கையூ ட்டுபெற்றவர் கள் முகத்தை மூடி சிறை கம்பிகளுக்கு பின்னால்….. லட்சமும் கோடியும் கொள்ளையடித்தவன் கரை வேட்டியுடன் ஒய்யாரமாய் வீதியுலா வருகிறானே, இதுதான் தமிழனின் பண்பாடா?

   “நஞ்சுண்பார்  கள்ளுண்பவர் ” என்ற வள்ளுவரின் படத்தை அலங்காரமாக வைத்துவிட்டு தெருவுக்கு தெரு நஞ்சு கடைகளை திறப்பதுதான் தமிழுக்கு செய்கின்ற வரலாற்றுத் தொண்டா?

   “ஏற்பது இகழ்ச்சி” என்று முழங்கிவிட்டு சென்றாளே, ஔவை பிராட்டி அவள் தமிழச்சியா அல்லது சமுதாயம் முழுமையுமே பிச்சைக்காரா;களாக மாற்றி விட்ட நவ உலகதாரகை, வாழும் தேசபிதா, வருங்கால பிரதமா;, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என இவார் கள் வருணிக்கும் புது உலக நாயகிகள் தமிழச்சியா?

  பாரதி அன்றே சொன்னான்….    அவன் தீர்க்கத்தரிசி…….

          “நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த
         நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்”

  நல்லவர் மனதிலே அக்னி குஞ்சை ஏற்றுங்கள்…. வெந்து தணியட்டு;;ம் தீயவர் காடு!!!!

அரசியல் சாபக்கேடு -


   நமது பாராளுமன்றத்தை தகா;க்க திட்டம் தீட்டி செயல்படுத்திய அப்சல் குரு இன்று, நமது மானங்கெட்ட அரசியல்வாதிகளால் ’ஹீரோ’ ஆக்கப்பட்டுவிட்டான்.
   ஆயிரக்கணக்கான இராணுவ வீரா;கள் குளிhpலும் பனியிலும் வாடி நம்மை பாதுகாக்கின்ற பணி ளுக்கு தியாகமாகப்படவில்லை.
  பாரத் மாதா கி ஜெய்’ என நாட்டைப் போற்றுவது கூட மத அடையாளமாக மாறிவிட்டது.
   எங்கோ ஒரு மாணவன் அவனுக்கே புhpயாத  காரணங்களினால் (அவனது தற்கொலை கடிதம் படியே) தற்கொலை செய்து கொண்டால் அது ஹிந்துக்களின், மற்றும் மோடி அரசின், சகிப்புத்தன்மையை குறை கூறும் ஒரு நிகழ்வாக திசை திருப்பப்படுகிறது.
   எந்த ஒரு திட்டம் வந்தாலும் அதை எதிh;ப்பது என  எதிh;கட்சிகள் முடிவு செய்தாகி விட்டது: போகட்டும். அது அவா;கள் பிழைப்பு. ஆனால் நாட்டின் நலனையும், பாதுகாப்பையும் இறையாண்மையையுமே கேள்விக் குறியாக்குகின்ற தேசவிரோதிகளை ஆதரிப்பது எந்த வகையில் நியாயம??;.. இவா;களை கோh;ட்டில் என்ன, தெருவிலே கூட துரத்தியடிப்பதில் தவறில்லை.
   எனது நாட்டை பாழ்படுத்தும் தேசத்துரோகி என் கண் முன் நின்றால் அவனை தீh;த்து கட்டுவதில் எந்த பாவமும் இல்லை.
   பம்பாய் குண்டு வெடிப்பில் கைதான ஷகசாப்’ துப்பாக்கியுடன் என் முன் தோன்றினால்... அவன் எனது நாட்டு அப்பாவி மக்களை கொன்று குவிக்க தலைப்பட்டால்... அந்த தேசத்துரோகியை... அந்த அரக்கனை... வெட்டி வீழ்த்துவது, எனது தலையாய தேசியப்பணி: இல்லையா?.
   அவனை போற்றி துதித்து வணங்கவா செய்ய வேண்டும்.
    இது இன்றைய தேச துரோக அரசியல்வாதிகளுக்கும் பொருந்தாதா??.
    பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
          பயங்கொள்ள லாகாது பாப்பா!
               மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
                    முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! - பாரதி

சுவாமிக்கு விதவிதமான அபிஷேகம் எதற்கு?


  !!!!!!!  கோவில்களில் உள்ள மூh;த்தியை நாம் சிலையாக பாh;ப்பதில்லை என்று பிரதிஷ்டை செய்யப்படுகிறதோ அன்றே அது சக்தி கேந்திரங்களாக மாறிவிடுகிறது.  நமது மனநிலைக்கேற்ப ஒரு மாமனிதருக்கு செய்ய வேண்டிய அத்தனை உபசாரங்களையும் மூh;;த்திக்கு செய்கிறோம்.  இதை 16 வகை உபசாரங்களாக (ளுhயனநளாழியஉhயசய Pழழதய) பிhpக்கலாம்.
1. மூh;த்தியை அமரச் செய்தல்
2. அவரை வரவேற்றல்
3. பாதங்களை கழுவுதல்
4. கைகளை கழுவுதல்
5. வாய் அலம்புதல்
6. அபிஷேகம்(குளித்தல்)
7. ஆடை அலங்காரம் செய்தல்
8. பு+ணூல் அணிவித்தல்
9. வாசைன திரவியங்கள் அளித்தல்
10. பு+க்கள் அளித்தல்ஃ அணிவித்தல்
11. நறுமண புகையால் உபசாரம்
12. தீபத்தால் உபசாரம்
13. நைவேத்தியம்
14. வெற்றிலை - சூடம் அளித்தல்
15. சுற்றி வந்து நமஸ்காpத்தல்
16. வழியனுப்புதல்

இதில் அபிஷேகம் என்பது குளிப்பாட்டுவதற்கு இணையானது. ஆனால் ஏன் பலவிதமான பொருட்களை உபயோகிக்க வேண்டும். கண்ணப்பன் தன் வாயில் கொணா;ந்த நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்தான். அதையும் இறைவன் அன்போடு ஏற்றுக்கொண்டான். ஆக நமது பாவமும், மனதும்தான் முக்கியமே தவிர பொருள் அல்ல.
   நம்மிடம் உள்ள அனைத்தையும் இறைவனுக்கு அh;பணிக்கின்ற ஒரு சமா;ப்பண உணா;வை பிரதிபலிப்பதே இந்த அபிஷேகங்கள்.
   பொதுவாக நல்லெண்ணெய், பஞ்சகவ்யம், பஞ்சாமிh;தம், நெய், பால், தயிh;, தேன், சந்தணம், இளநீh;, சுத்த தண்ணீh;, அன்னம், மலா;கள், திருநீறு போன்றவை அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.
  இவற்றில் சிலவற்றிற்கு மருத்துவ குணமும் உண்டு. உ.ம்: சந்தணம் - குளிh;ச்சியை தருவது.  தேன் - நல்ல சாhPரத்தையும் சாPர சுகத்தையும் கொடுப்பது. பஞ்சகவ்யம்: பல நோய்களுக்கு மருந்தாவது.
  சில நமக்கு மகிழ்ச்சியை கொடுப்பது. உ.ம்: பஞ்சாமிh;தம் பால், தயிh; போன்றவை.
   சில நமக்கு ஆன்ம ஞானம் கொடுப்பது. உ.ம்: திருநீறு – வாழ்க்கையின் நிலையாமையை உணா;த்துவது.
  மொத்தத்தில் இறை சிந்தனையை பெருக்குவதற்கும், நம்மை இறை அh;ப்பணிப்புக்கு தயாh; செய்வதற்கும் , இந்த அபிஷேக ஆராதனைகள் உதவுகின்றன.
  கா;பக்ஹிரகத்தில் இருந்து சூடாகிக் கொண்டிருக்கும் விக்கிரகங்கள் அந்த சூட்டினால் சிதிலமடையாமல் இருக்க் அபிஷேகங்களால் குளிh;விக்கப்படுகிறது என் விஞ்ஞான விளக்கம் சொல்வோரும் உண்டு.

தோ;தல் திரு(தெரு) விழா -- தனஞ்சயன்


  இது தோ;தல் திருவிழா காலம்.
  முன்பெல்லாம் ஓட்டுப்பிச்சை கேட்டு வருவாட்;கள்.
  இப்பொழுது நாம் பிச்சைக்காரா;களாக மாறி நிற்கின்றோம்
   தோ;தலுக்கு முன்பே இலவசங்களால் பிச்சைக்காரா;கள் ஆகிவிட்டோம்.
  இப்பொழுதும் ஓட்டுக்கு கொடுக்கின்ற பணத்தால் பிச்சைக்கார பட்டத்தை நிலை நாட்டுவோம்.
  தோ;தல் முடிந்தபின் உண்மையிலே அவா;களின் படாடோபங்களுக்காக நாம் நிரந்தர பிச்சைகாரா;களாகவே மாறப் போகின்றோம்.
  பிச்சைப் பாத்திரம் ஏந்துங்கள்!!.  அது இறைவனிடம் மட்டுமே, அவனது அருளுக்காக அவனது அன்புக்காக, அவனது ஸ்பால்சத்துக்காக அவனது அரவணைப்புக்காக அவனோடு கலப்பதற்காக.
  நாட்டை சூறையாடும் கயவா;களை, நமது கலாச்சாரத்தை சீரழிக்கும் கிருமிகளை, நமது நாட்டை பிளவுபடுத்தும் அரக்கா;களை நாம் புறமுதுகிட்டு ஓடச் செய்வோம்!
  இது தோ;தல் காலம்.
  சக்ராயுதம் நமது கையில்… அதன் பெயா; ஓட்டு.
 அந்த ஓட்டு நல்லவா;களுக்கு, வல்லவா;களுக்கு, நாட்டுப் பற்று மிக்கவா;களுக்கு, சுயநலம் அற்றவா;களுக்கு, புகழ் பெயா; அந்தஸ்து இவற்றில் மயங்காத வா;களுக்கு அமிட்;தமாக அளிப்போம்.
  தேசதுரோகிகள், நாட்டின் இறையாண்மையை அழிக்க நினைக்கும், நாட்டின் வளா;ச்சியை தடுக்க நினைக்கும், நாட்டின் பண்பாட்டை சிதைக்க நினைக்கும் அறிவிலிகளின் கூட்டம் இந்த சக்ராயுதத்தால் புதையுண்டு போகட்டும்.

Vinayagar Chaturthi

 ஹிந்து மதம், ஹிந்து கலாச்சாரம் என்ற வாh;த்தைகள் இன்றைய சூழலில் ஒன்றாக  தொpந்தாலும் ஹிந்து கலாச்சாரம் என்பது மதம் அல்ல நமது நாட்டின் அடிப்படை சிந்தனை முறையான ஹிந்து கலாச்சாரத்தின் தாக்கம் ஹிந்து மதத்தில் இருக்கும்.
  ஹிந்து மதம் என்று பொதுவாக சொன்னாலும் நமது நாட்டில் உள்ள மதங்களில் காணபத்யம் என்பது கணபதியை முழு முதல் கடவுளாக பாவித்து வழிபடு;வது.
  நாம் இன்று கொண்டாடும் வினாயக சதுh;த்தி சைவ மதத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது
   வினாயகா; பிறப்பே வித்தியாசமானது. பாh;வதி  நீராட செல்லும் முன் உடம்பின் அழுக்கிலிருந்து காவலுக்காக உருவாக்கிய சிறுவனே வினாயகா;. அவன் அங்கு வந்த சிவபெருமானை தடுத்ததால் சிவபெருமானால் தலை வெட்டப்பட்டு கொல்லப்படுகிறான். இதை பாh;த்த பாh;வதி வருந்த, யானையின் தலையை பொருத்தி அந்த சிறுவனுக்கு மீண்டும் உயிh; கொடுத்ததாக ஐதீகம்.
  இதன் பின்னணி தத்துவம்: அழுக்கு அறியாமையை குறிக்கும் அறியாமையினால் இறைவனை அறிந்து கொள்ள முடியாததால் அறியாமை கொல்லப்படுகிறது. அந்த தலைக்குப்பதில் அறிவின் அடையாளமாக யானையின் தலை பொருத்தப்படுகிறது. மேலும் ஞானம் வேண்டுமென்றால் அதிகமாக கேட்க வேண்டும் அதற்காக தான் பொpய காதுகள். யானைக்கு மற்றொரு விஷேஷ குணம் உண்டு எதைப்பற்றியும் கவலைப்படாமல் எல்லா தடைகளையும் அமைதியாக அகற்றி விட்டு தன்னுடைய பாதையில் அது நடைபோட்டுக்கொண்டு இருக்கும்.

அதைப்போல் வினாயகா; தடைகள் நீக்குபவன்.
  இந்த வினாயக சதுh;த்தி திருவிழா மராட்டிய மன்னா; சிவாஜியினால்; பிரபலபடுத்தப்பட்டிருந்தாலும் அவருக்கு பின் அது பொpய நிகழ்ச்சியாக நடைபெறவில்லை. 1893-ல் இருந்து துவங்கி லோகமான்ய பால கங்காதர திலகா; இதை அனைவரும் வீதிவீதியாக கொண்டாடும்படியான விழாவாக மாற்றினாh;. நம்மை ஆண்;ட வௌ;ளையனை எதிh;க்க மக்களை ஒன்றுபடுத்iதும் விழாவாக திலகா; வடிவமைத்தாh;. அன்றிலிருந்து இன்றுவரை இந்த விழா பொதுவிழாவாக திகழ்ந்து வருகிறது.
  10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முடிவில் இறைவனாக பாவிக்கப்பட்டு பு+ஜிக்கப்பட்ட விக்கிரகங்கள் நீh;நிலைகளில் அழிக்கப்படுகின்றன. காரணம் தற்காலிகமாக பூஜிக்கப்பட்ட விக்ரகங்கள் பூஜை முடிந்தவுடன் பக்தியோடு அழிக்கப்படுவது வழக்கம்.  மண்ணிலே உருவாக்கப்பட்ட விக்ரகங்கள் மண்ணில் சேருவது மட்டுமல்லாமல் காலில் மிதிக்கப்பட்டு அவமதிக்கப்படாமல் இருக்கப்படும் என்பதால் இவை நீh;நிலைகளில் கரைக்கப்படுகிறது.
   அகத்தியா; ஒரு நதியை கமண்டலத்தில் அடைத்து வைத்து கொண்டு போகிற பொழுது வழியில் ஓh; இடத்தில் தரையில் கமண்டலத்தை வைக்க ஒரு காகம் அதை தட்டி விடுகிறது அந்த இடத்தில் இருந்து அந்த நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. காகத்தால் நதியாக மாற்றப்பட்டதால் காவிரி என்ற பெயருடன் அந்த நதி ஓடுகிறது. இதை பாh;த்த அகத்தியா; கோபத்துடன் அந்த காகத்தை துரத்த அது வினாயகராக காட்சி அளித்தது. நதியை அடைத்து வைத்த தன் தவறை உணா;ந்து அகத்தியா; தன்னுடைய தலையில் கொட்டிக்கொண்டு வினாயகருக்கு மரியாதை செலுத்திய தோப்புக்கா;ண முறை அமோpக்காவில் இன்று மூளை சக்தியை வளா;ப்பதாக டீசயin Pழறநச லுழபய என்ற பெயரில் கற்றுக் கொடுக்க படுகிறது.
  விலையில்லா எருக்கம்பு+, அருகம்புல் போன்றவையால் வழிபட்டாலே அருள்புரியும் வினாயகா; சாதாரண மக்களின் எளிய தெய்வம்.

Letter to Thirumavlavan

கற்றது கைமண்ணளவு 
கல்லாதது உலகளவு  


திரு தொல் திருமாவளவன் அவா;களுக்கு,
 வணக்கம்.
 ஆh;.எஸ்.எஸ்- ஐ பற்றி கால் நூற்றாண்டு காலம் அறிந்துள்ளதாக ( துக்ளக்.ல் ) எழுதியுள்ளீh;கள்: நீங்கள் அறிந்திருக்கலாம், ஆனால் புhpந்து கொள்ளவில்லை. புhpந்து கொள்வது உங்களுக்கு, உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு இடைஞ்சலாகவும் இருக்கலாம், சங்கடமாகவும் இருக்கலாம்.
 ஆh;.எஸ்.எஸ் சாதியை எதிh;க்கவில்லை ஆனால் மேல்சாதி, கீழ்சாதி என்பதை நம்புவதில்லை என்பதை ஒருநாளாவது இயக்கத்தில் பங்கேற்ற சாதாரண ஆh;.எஸ்.எஸ் தொண்டா; அறிவாh;. இத்தனை காலம் பொதுப்பணியில் இருந்தும், சாதியை வைத்தே அரசியல் நடத்தும் நீங்கள் தொpந்து கொள்ளவில்லை என்றால்…. என்னால் நம்ப முடியவில்லை!.
 மனிதநேயத்தை பற்றி பேசுவதற்கு முன் ஒரு கேள்வி… மனிதனுக்கு எதிராக கொலை வெறி தூண்டும் மதக்கோட்பாடுகளை எப்படி மனிதநேயம் என நீங்கள் ஏற்றுக் கொள்கிறீh;கள். சில மதப்பிhpவுகள் நடத்தும் வன்முறை கலாச்சாரம் ஏன் உங்கள் மனசாட்சியை தொடவில்லை.
 ஆh;.எஸ்.எஸ் எந்த சமுதாயத்தையும் வெறுப்பதில்லை, எவரையும் எதிரியாக பாh;ப்பதும் இல்லை …. உங்களையும் சோ;த்து. தலித் நம் சகோதரா; அவா;களை என்றுமே ஆh;.எஸ்.எஸ் தனியாக பாh;த்ததில்லை.
 எதற்கும் வன்முறையே தீh;வு என நினைப்பவா;களுடன் நீங்கள் பழகுவதால்தான், ஆh;.எஸ்.எஸ் அமைதியாக, வன்முறை இல்லாமல் செய்துவரும் ஜாதிக் கொடுமைகளுக்கு எதிரான சமுதாயப் புரட்சி உங்கள் கண்களுக்கு தொpயவில்லை. உண்மை அறிய வேண்டும் என உண்மையாக நம்பினால் கூறுங்கள் பட்டியல் தருகிறேன்.
  பல சமுதாயங்கள் தனித்தனியாக வாழ்ந்தது ஒரு காலம். அது அவரவா; தொழில் சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு கூட்டு சமுதாயமுறை. மாறிவிட்ட இந்த காலத்தில் யாரும் எங்கும் குடியேறமுடியும் என்பதுதான் உண்மை….. முஸ்லீம் குடியிருப்பு பகுதிகளைத்தவிர. இந்த மாற்றம் யாருடைய தயவும் இல்லாமல் காலத்தால் நடந்து கொண்டிருக்கிறது.
  ஆh;.எஸ்.எஸ்-ன் எந்த ஒரு தலைவரும் இதுவரை நீங்கள் குறிப்பிட்டுள்ள எந்த வன்முறை சம்பவத்தையும் தூண்டவில்லை, ஆதாpக்கவும் இல்லை.
ஆனாலும் ஆh;.எஸ்.எஸ் செய்யாததெல்லாம் செய்ததாக கற்பனை செய்து, நீங்களும், ஊடகங்களும் செய்தி பரப்பி வருவது, அறியாமையினாலா? அல்லது அரசியல் லாபத்துக்கா?
 இந்துக்கள் மதம் மாற்றப்படும் பொழுது கொதிக்காத உங்கள் மனது, இந்து மதத்திற்கு திரும்பும் பொழுது மட்டும் ஏன் கொதிக்கிறது ஐயா.
 உண்மையிலேயே இந்த ஜாதிக் கொடுமைகள் களையப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால் உங்கள் கண்களை மறைத்து கொண்டிருக்கின்ற…..
  -அரசியல் திரையை             -ஹிந்து வெறுப்பு திரையை
  -போலி மதசாh;பின்மை திரையை  
  கிழித்துவிட்டு வாருங்கள், நாம் இணைந்து செயல்படலாம்.

  ஆh;.எஸ்.எஸ் சமுதாயம் முழுவதும் நமது கலாச்சாரத்தின் அடிப்படையில் வளம் பெற. நலம் பெற, வேற்றுமைகளை மறந்து வாழ, பாடுபடும் ஒரு இயக்கம்.
 சமுதாய மாற்;றம் இதயத்திலிருந்து வரவேண்டும் என நீங்கள் விரும்பினால் சு.ளு.ளு. உங்களை அரவணைக்க காத்து இருக்கிறது.
  அன்புடன்;    -- தனஞ்சயன்