இலவில் காய்த்திருந்த பஞ்சு
காத்திருந்தது,
விண்ணில் பறக்க ....
மழை வரும் வரை...
மீண்டும் வெள்ளம் வரும்:
களி மண்ணில்
புதைந்த மீன்..
வந்தது கொக்கு...
குஞ்சுகள் பார்த்திருந்தது
தாயின் வருகை
கழுகு வந்ததால்
சித்தியானது ....
வேண்டி மனம் நாடியது
பேரானந்தம்
இக சுகம் கூடியதில்
கூடாததே ஆனந்தம் !!