Tuesday, 28 May 2024

கேட்டதும் கிடைத்ததும்

 

இலவில் காய்த்திருந்த பஞ்சு
காத்திருந்தது,
விண்ணில் பறக்க ....
மழை வரும் வரை...

மீண்டும் வெள்ளம் வரும்:
களி மண்ணில்
புதைந்த மீன்..
வந்தது கொக்கு...

குஞ்சுகள் பார்த்திருந்தது
தாயின் வருகை
கழுகு வந்ததால்
சித்தியானது ....

வேண்டி மனம் நாடியது
பேரானந்தம்
இக சுகம் கூடியதில்
கூடாததே ஆனந்தம் !!