Tuesday, 29 August 2023

ஏன் வந்தாய் நீ

 ஏன் வந்தாய் நீ .... என் பாவம் தொலைத்திடவா ... அல்லது உன் பாவம் கழித்திடவா 


அது என்றும் போல் ஒரு ரம்மியமான காலைப்பொழுது. கல்லூரியின் வாசலில் நுழைகின்ற நேரம்...
மேலாளர் அருகில் வந்தார்.
தரையை சுட்டிக் காட்டினார்.
ஒரு மொட்டு முழுதாக மலரும் முன், கிளையிலிருந்து பிரிந்து, கண்களில் மிரட்சியோடு, சிலை போல அமர்ந்திருந்தது....
தாயை பிரிந்த ஏக்கமா?... அல்லது தன்னை தாய் புறம் தள்ளிவிட்டாளே என்ற சோகமா.?.. தெரியவில்லை...
அடைக்கலம் தேடி எப்படி தனியாக வந்தது.??.
அந்த சின்னச்சிறு குருவி எந்த எதிர்ப்பும் இன்றி கைகளில் வந்தது..
அது எந்த இனம்!!! ... மனிதர்களைப் போல் ஏன் இனம் பிரிக்க வேண்டும்.. தெரியாமல் இருந்துவிட்டுதான் போகட்டுமே..
என் வீட்டிற்கு அதிதியாய் நுழைந்தது..
புதிய வீட்டில் புதுப்பெண் போல் மருட்சியோடு நுழைந்தது .
சிறிது நேரத்தில் இறுக்கம் களைந்து கொஞ்சம் தண்ணீர் பில்லரில் கொடுக்க , அருந்தியது....
இறகுகளுள் முகம் புதைத்து நிம்மதியாய் தூங்கியது...
அப்படியே தூங்கியது .... எழும்பவில்லை . ....