தந்தையை நானறிவேன்
பாட்டனை நானறிவேன்
அதன்
முந்தையர் யாரறிவார்!!
பிறந்தார்,
இருந்தார்,
மறைந்தார்,
இதுவே வாழ்க்கையெனில்
தோற்றலின் பயனென்ன ?
செயற்றலின் பயனென்ன ?
வீழ்தலில் குறையென்ன ?
புரிந்தும் புரியாத
இருண்ட பகலிலே
பகடை உருட்டுபவன்
ஆட்டுகிறான்
ஆடுகின்றோம்
வாழ்தலும் அவன் சித்தம்
வீழ்தலும் அவன் சித்தம்
இந்த
ஒட்டாத
பழரசத்தை
மேனியில் ஒட்டிவிட்டால்
இரண்டிலும் இனிமையிலை
இரண்டிலும் துன்மையிலை
ஓட்டும் வழியறியா
அலைந்து ஓய்ந்துவிட்டேன்
மற்றை பிறவியதில்
விழித்தால் பிழைத்திடுவேன்
- தனஞ்சயன்