Friday, 16 September 2022

மனதை வருடிய தருணங்கள் --- 16 - 09 - 2022

 மனதை வருடிய தருணங்கள் --- 16 - 09 - 2022


இன்று எங்களது Vivek Institute - ம் , Hindhustan College Of Arts and Science , சென்னை-ம் இணைந்து நடத்திய WORKSHOP ON SEROLOGICAL  & DIAGNOSTICS TECHNIQUES இனிதே நடந்து முடிந்தது.


நிறைவு விழா முடிந்து அனைவரும் விடை பெறுகின்ற தருணம் மறக்க முடியாத ஒரு நிகழ்வு நடந்தது!!!! 


திடீரென அந்த கல்லூரியிலிருந்து வந்த ஒரு மாணவன்,  ஆசி வேண்டி, நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்து வணங்கி எழுந்து நின்றான்.


திருமணத்தன்று மட்டுமே பெற்றோர் காலில் வேறு வழியில்லாமல் விழுந்து வணங்கும் குழந்தைகள்....


இறைவன் சந்நிதியில் கூட விழுந்து வணங்க மறுக்கும் மனது கொண்ட தலைமுறை...


பெரியோர்களை வணங்குவது கௌரவ குறைவு என கருதும் ஒரு காலகட்டத்தில்.. 


எங்கிருந்தோ வந்த ஒரு மாணவன்...


எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படி மரியாதையை செலுத்தியது...


கண்களில் கங்கை பெருகியது....


கடந்த 38 வருட கல்லூரி பாடம் நடத்திய அனுபவத்தில், இன்று ஆத்ம திருப்தி அடைந்தேன்.   


எதிர்கால சந்ததி மீது எனக்கு நம்பிக்கை பிறந்த நாள் இன்று...   

Monday, 5 September 2022

நானே சிவம்

 

पुण्यं पापं सौख्यं दु:खं मन्त्रो तीर्थं वेदो यज्ञः |

अहं भोजनं नैव भोज्यं भोक्ता चिदानन्द रूप: शिवोऽहं शिवोऽहम् ||

na punyam na papam na sokhyam na dukham na mantro na tirtham na vedo na yagyah |

aham bhojanam neva bhojyam na bhokta chidanand rupah shivoham shivoham

 

புண்ணியமும் நானில்லை , பாபமும் நானில்லை

துக்கமும் நானில்லை, இன்பமும் நானில்லை

மந்திரத்தில் நானில்லை, தீர்த்த யாத்திரையில் நானில்லை

வேதங்களும் நானில்லை, யக்ஜ்னங்களும் நானில்லை

உண்பதும் நானில்லை, உணவாவதும் நானில்லை

நான் பேரின்ப பெருநிலை

நானே சிவம்

நானே சிவம்

                                                             ----    ஆதிசங்கராச்சாரியார் அவர்கள் இயற்றிய நிர்வாண ஷடகம்

 

நாலுவேதம் ஒதுவீர் ஞானபாத அறிகிலீர்

பாலுள்நெய்கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்

ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே

காலன்என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே.

                                                    ---        சிவ வாக்கியர்

 

என்னுள்ளே உறைந்திருக்கும்

இணையில்லா ஈசனை

காணுகின்ற கண் கொண்டு

காண்பதுதான் எக்காலம்...

 

இப்பிறவி காண்பதற்கு கனவினுள்ளும் வழிகளில்லை

எப்பிறவி எடுத்து உன்னுள் மறைவதுவும் எக்காலம்???? 

 

  -   தனஞ்சயன்