அகம் ப்ரஹ்மம் என்றார் :
நீயே அதுவென்றார் :நானே அதுவென்றால்???
அதனினின் என்னை
எடுத்தபின் அது என்ன...
அது அதுவா, இல்லை குறைவா?
அதில் நான் சேர்ந்தபின்
அது அதுவா
இல்லை அது மிகுமா??
மிகுதலும் இல்லை !
குறைதலும் இல்லை !
அது புதிரா??
விடை காணா
புதிரிலே நானும்
அவிழாத ஒரு முடிச்சா??
ஆதிக்கே ஆதி
அதுவே ஆதியென்றால்
அதற்கு முன்??
அதற்கு முன்
இல்லையென்றால்
அதற்கு பின்??
வெற்றிடமே அதுவானால்
வெற்றிடமாய் அதுவாமோ???
வெற்றிடத்தில் நானும்
கரைந்து பின் ??
பூரணம் தான் வெற்றிடமோ
வெற்றிடம்தான் பூரணமோ??
கணிதங்கள் தோற்றுவிடும்
கற்பனைகள் பேதலிக்கும்
உணராத உணர்வதனை
உணர்வதுதான் எக்காலம்??
--- தனஞ்சயன்