Friday, 29 April 2022

அழுகுணிசித்தர்

 

காட்டானை மேலேறி கடைத்தெருவே போகையிலே

நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ

நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலுங்

காட்டானை மேலேறி என் கண்ணம்மா

கண்குளிரக் காண்பேனோ  

                                              -------  அழுகுணிசித்தர்

 

காட்டானை, …  உண்மை உலகை காட்டானை,  ….. என்னையே எனக்கு காட்டானை, மாயனை, தேவனை, காட்டானை, …. காட்டானை போல் வெறிகொண்டு பொய்மானை தேடுகின்ற,  ஊனக்  கண்களுக்கு, மேல் ஏறி , …. புருவங்கள் கோர்கின்ற சூட்சுமத்தில் நிலை நிறுத்தி, கடைசியிலே சென்றடையும் பரமனவன் நிலை நோக்கி,… ஒரு மனதாய் உருக வென்றால் ...!!!!

 

நாட்டினிலே, வீட்டினிலே, சுகத்தினிலே, இகத்தினிலே, நாட்டமே கொண்டுழலும் என் மனக்குதிரை நகைக்கிறது, ஏளனமாய் கனைக்கிறது..

 

என் கண்ணம்மா,…..  மனக்குதிரை நகைத்தாலும், இகத்திற்கு இழுத்தாலும், பார்வையினை உள்நிறுத்தி, பரத்திற்கு வழிதேடி, இறைநிலையில் குளிர்ந்திடுவேன்….. ஞானமும் நான் கடந்திடுவேன்   

                                        -------புரியும் தமிழில் புரிந்தவரை தனஞ்சயன்

No comments:

Post a Comment