தருமசேனரான சமணத்தில் மாறிய மருள்நீக்கியாருக்கு தீராத வயிற்று வலி.
சமண மதம் கைகொடுக்கவில்லை.
ஓடி வந்தார் தமக்கை திலகவாதியாரிடம்..
தமக்கையின் அறிவுரைப்படி, அங்கு எழுந்தருளியிருந்த பிறைசூடனை எண்ணி,
“கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.”
(திருவதிகை திருப்பதி தலைவனே! என்ன பிழை நான் செய்தேன் புரியவில்லை, பெருநோயாய் சூலை என்னை வாட்டுகிறது. காத்தருள்வாய் .. உன்திருவடிகள் விடாது பற்றி துதிப்பேன்.. )
என்று துவங்கி, பதிகம் பாடி, நோய் நீங்கி, திருநாவுக்கரசராக பயணம் தொடர்ந்தார் ...
வலி சிலநேரங்களில் நல்லது ....
--- சித்திரை சதயம் ஸ்ரீ திருநாவுக்கரசர் (அப்பர்) குருபூஜை
நாள் .
No comments:
Post a Comment