Monday, 26 May 2025

சிதடனாய் மாற்றிவிடு

 கண்கள் கலங்கவில்லை !!

கண்ணில் இனி ஈரமில்லை... 


இது காட்சியா 

         அல்ல நமது வீழ்ச்சியா??


இருப்பவர் சுவைத்து போக 

எஞ்சிய அமிர்தம் என 

பசித்தவர் எடுத்துப்போக 

பிஞ்சதன் நெஞ்சம் 

இங்கு கெஞ்சிடும் 

           காட்சி என்ன::: 


ஊனில் துளையெடுத்து 

உதிரம் தனை குடித்து 

துடியாய் துடிப்பதுபோல் 

நெஞ்சம் துடிப்பதென்ன 

கண்கள் மறைப்பதென்ன 


இதுவும் 

உன் விளையாட்டென்றால்     

இறைவா நிறுத்திவிடு

இல்லை 

எனை     

சிதடனாய் மாற்றிவிடு 

   - தனஞ்சயன் 




No comments:

Post a Comment