....உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவோர்.....
------இராமலிங்க சுவாமிகள்
---------------------------------------------------------
உளத்தில் உளதெல்லாம்
உதட்டில் வருவதென்று
உருவில்லா உருவினிடம்
உள்ளுருகி வேண்டினன் நான்..
"உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவோர்"
உறவுமினி வேண்டாம்
அருளென்று நாடினேன்..
அண்டம் கதிகலங்க
பேயன் சிரித்து நின்றான்
வேறு மார்க்கமில்லை
போகாத ஊருக்கு
வழிதான் உண்டுமோ??
உண்மையும் நேர்மையும்
செத்தொழிந்து நாளாச்சே
ஊமையாய் செவிடாய்
போ என்று வரம் கொடுத்தான்.
------ தனஞ்சயன்
No comments:
Post a Comment