Wednesday, 27 September 2023

நிம்மதி அது எங்கே

 .... நிம்மதி அது எங்கே???.....

கோபுரத்தில் கூடுகட்டி
விண்ணுயர சிறகடித்து
பார்முழுதும் சுற்றிவரும்
படைத்தவர்க்கும் கிட்டவில்லை
ஆயிரம் அணிதொடர
ஊர்வலமாய் செல்பவர்க்கும்
நாவலற்கும், பாவலற்கும்
நிச்சயமாய் கிட்டவில்லை
திறமையினால் கோலோச்சி
பட்டங்களும் பதவிகளும்
தேடிவந்து குவிந்தவர்க்கும்
எந்நாளும் கிட்டவில்லை
பந்தங்களும் பாசங்களும்
தேடி வந்து கூடி நின்று
சொந்தக்கதை பேசிநின்று
உள்சிரித்து, வெளிஅழுது....
கடைக்கால் வழியனுப்பும்
இனிதான தருணம்வரை
விடைகாணா கேள்வியிது
நிம்மதியில் உலகமிது!!
தேடிநிதம் அலுத்து
உறங்கா விழி மூடி
மீளா துயில் பெறவே
தேடும் அது கிடைக்கும் (?)
கிடையா பொருள் நோக்கி
விழிகள் திறந்துவைத்து
கிடைக்கும் என நினைத்து
விழிகள் மூடுகிறோம்!!!

No comments:

Post a Comment