மலை மலையாய்
மலை மலையாய்
எண்ணக் குவியல்கள்
எண்ணா குவியல்கள்:
மலை மலையாய்
மலை மலையாய்
எண்ணக் குவியல்கள்
எண்ணா குவியல்கள்:
அதில் எதை சேர்க்க, எதை விடுக்க
இருக்கட்டும்: என்றோ உதவலாம்.
அலமாரியில் அடைத்து வைத்த பழந்துணிபோல்
மலை மலையாய் எண்ணக் குவியல்கள்.
நல்லவற்றை தேடுங்கால்
தீயவைகளை முளைத்து வரும்
அவை வேண்டாம் என ஓட
எவை எவையோ மறைந்து விடும் :
இறைவன் மிக பெரியவன்
மலைமுகடு தெரிவது போல்
மலை முழுதும் தெரிவதில்லை.
மலை முழுதும் தெரிந்து விட்டால்
வாழ்க்கையில் ஓர் அமைதி இல்லை
மலை மலையாய், இருந்தும்
மறதியெனும் அருமருந்தால்
உயிர் பிடித்து வாழ்கின்றேன்
இறைவன் மிகப்பெரியவன் !!!
----தனஞ்சயன்
No comments:
Post a Comment