ஒரு குழந்தை பிறக்கிறது.
அனைவருக்கும் மகிழ்ச்சி.
மருத்துவர்களும், செவிலியர்களும் பரபரப்பாய் குழந்தைக்கு பணிவிடைகள் செய்ய...
குழந்தையின் முதல் முக தரிசனத்திற்காய், அத்தையும், மாமியும், சித்தியும் பெரியம்மாவும், மாமா, சித்தப்பா, பெரியப்பா என ஒரு படையே காத்து நிற்க....
தாத்தாவும் பாட்டியும், குழந்தையை காணும் ஆவலோடு, மகளின் நிலையென்ன என்ற தவிப்போடும் தேடி நிற்க ...
சுற்றமும் நட்பும் முதல் பரிசு எனது என்று ஏங்கி நிற்க ...
ஒரு சிறு திருவிழா அரங்கேறும் நேரம்...
ஒரு குழந்தை பிறக்கிறது.
***********************
கதிரவனின் கிரணங்கள் கீழ்த்திசையில் எட்டிப் பார்க்க..
மெல்லிய பூங்காற்று மேனியை இதமாக வருட..
புள்ளினங்கள் கீச்சென்று இசை பரப்ப ......
மொட்டுகள் மெல்லிய ஓசையோடு இதழ் விரிக்க...
எங்கும் இனிமையும், குளுமையும், சுகந்தமும் தவழ்ந்துவர.......
"புள்ளும் சிலம்பின காண்.....................
கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ"
என்று உலகம் துயிலெழும், "ப்ரஹ்மமுஹுர்த்தம்"
ஓரு நாளின் இனிய பிறப்புரைக்கும் நேரம்..
**************************
ஒரு குழந்தை பிறக்கிறது....
இனிமை தவழ்கின்ற ஒரு பொழுதில்..
பிறப்பு இனிமையானது
பிறப்பு செயல் நிறைந்தது
பிறப்பு பேரானந்தம் கொடுப்பது...
ஒரு நாளின், ஒரு ஆண்டின் பிறப்பும், அங்ஙனமே..
இனிமையான, செயல்கள் துவங்குகின்ற,
உலகு விழிக்கின்ற அதிகாலை நேரமேயன்றி ....
"The Dead of Night" அல்ல .
- Dhananjayan
No comments:
Post a Comment