ஆடி அமாவாசை
வாராது இனி மீண்டும்
வசந்தமினி வாராது
தாய் வயிற்றில் மிதந்திருந்த
இதங்கள் இனி வாராது:
வெயிலுக்கும் குளிருக்கும்
போர்வையின்றி சுகித்திருந்த…
வாராது
இனி
மீண்டும்
- அந்த
வசந்தமினி வாராது
பசுயுமில்லை ருசியுமில்லை,
தூக்கமில்லை விழிப்புமில்லை,
உதிரத்தை பகிர்ந்தளித்த
பானைக்குள் கண்மூடி
நித்திரையில் பத்திரமாய்
நீந்தி விளையாடிநின்ற….
வாராது
இனி
மீண்டும்
- அந்த
வசந்தமினி வாராது
கண்ணென்றும் மணியென்றும்
நாற்கரங்கள் சுமப்பதில்லை!
ஓடினால் விழுவெனென்று
துரத்தும் விழி வாராது!
முகம் வாட நீர்பெருக்கும்
சால்கள் எங்கு மறைந்ததுவே
வாராது
இனி
மீண்டும்
- அந்த
வசந்தமினி வாராது
தோல்விபயம் துளைத்தெடுக்க
தோள்கொடுத்து தாங்கி நின்ற,
தோள்கள் இனி தாங்காது
மண்புதைந்து மாய்ந்ததுவே
அன்னையும் தந்தையும்
மறைந்தபின் இவ்வுலகில்
வாராது
இனி
மீண்டும்
- அந்த
No comments:
Post a Comment