தூக்கம்... அது ஒருவகை மயக்கம்
கள்ளினும் இனியதாய் மெய்மறந்து கண்ணயரும்
தூக்கம்.... அது ஒரு வகை மயக்கம்:
உறங்குவது போலும் சாக்காடு... இல்லை
இவ்வுலகத் துன்பமெலாம்… மதி மறந்து
தூக்கம்….. அது ஒரு இன்ப மயக்கம்!
வாழ்ந்திடா வாழ்க்கையெலாம்
வாழ்வதாய் கனவு கண்டு ……
தூக்கம்.... அது ஒரு போதை கிறக்கம்!
ஆழ்மனதின் உணர்வலைகள்
பகைவர்களைப் பந்தாடும்
தூக்கம்... அது ஒரு வெற்றிக் களிப்பாம்..
உறங்கி விழிப்பது போலும் பிறப்பு..
வேண்டேன் வள்ளுவரே…. இன்ப
மயக்கத்தில் தூங்குகிறேன்….. விழிக்க வேண்டாம்.
கவியரசே நன்றி பல……..
“அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும்
ஆழ்ந்த துயிலினிலே
அமைதியினைக் காணட்டும்.”
No comments:
Post a Comment