அது வாழ்க்கையின் வசந்த காலம்!
கிடைத்ததை கொண்டு, அது கிளிஞ்சல் என்றாலும்
படைத்தவன் அழித்த, பொக்கிஷம் என்று
கையிலும் பையிலும் பிரியா இணையென
வெய்யிலில் மகிழ்ந்து திளைத்ததும் உண்டு!
கூழுடன் அன்பும் அமிர்தமாய் உண்டு
நிறைகுடமென கும்பியும் நிறைந்து சரிந்து
நொடியினில் மயங்கி விடியலில் நிமிர்ந்து
ஓடிய பொழுதெலாம் விளையாடிய பொழுதே!
பாலர்க்கு கவலையில்லை, அன்னையும் அப்பனுண்டு:
மாதருக்கு கவலையில்லை, வருபவன் துணையுமுண்டு:
காளைக்கு கவலையில்லை சுற்றமும் நட்புமுண்டு :
ஓய்வினில் கவலையில்லை மகனுடன் மகளுமுண்டு:
அது வாழ்க்கையின் வசந்த காலம்
.. அது இறந்த காலம் !!!
இன்பத்தை துன்பமாய் தொலைத்து விட்டு
துன்பத்தில் தேடுகிறோம், தொலைந்த ஒன்றை...
துன்பத்தை முன்னிறுத்தி இன்பத்தை தேடுகிறோம்
இன்பத்தை முன்னிறுத்த துன்பம்தான் இறந்திடுமே!!
No comments:
Post a Comment