மனதை வருடிய தருணங்கள் --- 16 - 09 - 2022
இன்று எங்களது Vivek Institute - ம் , Hindhustan College Of Arts and Science , சென்னை-ம் இணைந்து நடத்திய WORKSHOP ON SEROLOGICAL & DIAGNOSTICS TECHNIQUES இனிதே நடந்து முடிந்தது.
நிறைவு விழா முடிந்து அனைவரும் விடை பெறுகின்ற தருணம் மறக்க முடியாத ஒரு நிகழ்வு நடந்தது!!!!
திடீரென அந்த கல்லூரியிலிருந்து வந்த ஒரு மாணவன், ஆசி வேண்டி, நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்து வணங்கி எழுந்து நின்றான்.
திருமணத்தன்று மட்டுமே பெற்றோர் காலில் வேறு வழியில்லாமல் விழுந்து வணங்கும் குழந்தைகள்....
இறைவன் சந்நிதியில் கூட விழுந்து வணங்க மறுக்கும் மனது கொண்ட தலைமுறை...
பெரியோர்களை வணங்குவது கௌரவ குறைவு என கருதும் ஒரு காலகட்டத்தில்..
எங்கிருந்தோ வந்த ஒரு மாணவன்...
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படி மரியாதையை செலுத்தியது...
கண்களில் கங்கை பெருகியது....
கடந்த 38 வருட கல்லூரி பாடம் நடத்திய அனுபவத்தில், இன்று ஆத்ம திருப்தி அடைந்தேன்.
எதிர்கால சந்ததி மீது எனக்கு நம்பிக்கை பிறந்த நாள் இன்று...
No comments:
Post a Comment