न पुण्यं न पापं न सौख्यं न दु:खं न मन्त्रो न तीर्थं न वेदो न यज्ञः |
अहं भोजनं नैव भोज्यं न भोक्ता चिदानन्द रूप: शिवोऽहं शिवोऽहम् ||
na punyam na papam na sokhyam na dukham na
mantro na tirtham na vedo na yagyah |
aham bhojanam neva bhojyam na bhokta
chidanand rupah shivoham shivoham
புண்ணியமும் நானில்லை , பாபமும் நானில்லை
துக்கமும் நானில்லை, இன்பமும் நானில்லை
மந்திரத்தில் நானில்லை, தீர்த்த யாத்திரையில் நானில்லை
வேதங்களும் நானில்லை, யக்ஜ்னங்களும் நானில்லை
உண்பதும் நானில்லை, உணவாவதும் நானில்லை
நான் பேரின்ப பெருநிலை
நானே சிவம்
நானே சிவம்
---- ஆதிசங்கராச்சாரியார் அவர்கள் இயற்றிய நிர்வாண ஷடகம்
நாலுவேதம் ஒதுவீர் ஞானபாத அறிகிலீர்
பாலுள்நெய்கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன்என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே.
--- சிவ வாக்கியர்
என்னுள்ளே உறைந்திருக்கும்
இணையில்லா ஈசனை
காணுகின்ற கண் கொண்டு
காண்பதுதான் எக்காலம்...
இப்பிறவி காண்பதற்கு கனவினுள்ளும் வழிகளில்லை
எப்பிறவி எடுத்து உன்னுள் மறைவதுவும் எக்காலம்????
- தனஞ்சயன்
No comments:
Post a Comment