விநா தைன்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபையா சம்போ
த்வயி பக்திம் அசஞ்சலாம்"
.....................
நம்முள் நாமே உணராததை
அதன் பொருள் ஏதென்று தெரியாததை
என்று வருமென்று புரியாததை
நினைத்திட பயம் வரல் இயற்கையன்றோ!!
உடைவதற்காய் நீர்க்குமிழி பறப்பதில்லை
உடைந்து பின் மீண்டும் அது சேர்வதில்லை
ஆயினும் அது நிலைத்து நிற்கும்
ஐந்தில் ஓன்று பூதத்தோடு சேர்ந்து நிற்கும்.
காலமது முடிந்துவிட்டால் காலன் தானே
கோலங்கள் அழித்து இமை குவியும்
வாவென்று சொன்னாலும் வருவதில்லை
போவென்று மறுத்தாலும் விடுவதில்லை
தெரியாத நிலை எண்ணி பயம் எதற்கு
உயிர் பிரியும் நாளொன்று உண்மைதானே
முடியாத கருமம் எண்ணி கலங்கலென்ன
நொடியில் ஒரு மரணம் இனி வேண்டுவேனே.....
No comments:
Post a Comment