ஏனிந்த கொடுமை இறைவா....
வீதி எங்கும் ஓலங்கள்
நாடு எங்கும் சிதைமலைகள்
வாழ்வினிலே கண்டிராத
பிரளயத்தின் பெரும்கூத்து
இயற்கை அன்னை நர்த்தனமே
இதுவரைக்கும் கண்டிருந்தோம்
பேரழிவு பொழிந்துநின்ற
அணு அதையும் கேட்டிருந்தோம்
உரு தெரியா உயிரதாலே
ஏனிந்த கொடுமை இறைவா....
ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய்
சுற்றமும் நட்பிழக்க
வீடெல்லாம் (சுடு) காடுகளாய்
மாறியது தாங்கிடவோ
எம் தவறோ உன் தவறோ
இழந்துவிட்டோம் நல்மணிகள்
உன் கருணை விழிகளினால்
எம் கவலை தீர்ப்பாயா??
பிள்ளைகள் நாம் கலங்குகிறோம்
அணைத்துவிடு பெருநெருப்பை
பூமிதனில் எரிவதினி
உன் திருவிளக்காய் இருக்கட்டும்……..
……. தனஞ்சயன்
No comments:
Post a Comment