एको देवः सर्वभूतेषु गूढः सर्वव्यापी सर्वभूतांतरात्मा |
कर्माध्यक्षः सर्वभूताधिवासः साक्षी घेता केवलो निर्गुणश्च ||
- Swetasvatara Upanishad 6-1
"இறைவன் எல்லா உயிர்களிலும், எங்கும் நிறைந்து, எல்லா உயிர்களுக்குள்ளும் மறைந்திருக்கிறார். அவனே எல்லா செயலுக்கும் தலைவனாய் இருந்து சாட்சியாயும் இருக்கிறான். அவன் அதீதமானவன், அதாவது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவன், எதற்கும் கட்டுப்படாதவன்"
ஒரு அழகான கதை உள்ளது. ஒருவனுக்கு தீடிரென்று தான் ஒரு எலி என்று தோன்றியது. இந்த எண்ணம் ஆழ் மனதில் பதிந்து, அதை முழுவதுமாக நம்பி, பூனையை பார்க்கும்போதெல்லாம் பதுங்கி ஒதுங்கி கொள்வான்.
அவனை ஒரு மருத்துவரிடம் கூட்டி சென்று, வேண்டிய மருத்துவம் பார்த்து, அவன் தான் எலி அல்ல மனிதன் என்பதை உணர்ந்து கொண்டான்.
ஆனால் அவனுக்கு புதிய ஒரு சந்தேகம். நான் எலி அல்ல என எனக்கு புரிந்துவிட்டது, ஆனால் அது பூனைக்கு தெரியுமா??, அது என்னை எலியென துரத்தினால்???, என புதிய கவலை வந்தது .....
இது எல்லா நல்லவர்க்கும் வருகின்ற ஒரு கவலை.
எப்படி அனைவரையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பது.??
அவருக்கு புரிகின்ற மொழியில் பேசணுமா அல்லது, எனது ஆத்ம ஞானத்தை புரிந்து அனைவரையும் ஒரேபோல் அணுகவேண்டுமா??.
அனைத்தையும் இறைவனாய் பார்த்தால் உலகில் எதனோடும் எனக்கு பகையே இருக்காது. ஆனால்.... "நான்" இருப்பேனா??.
பகை அழிக்கத்தானே பகவான் கீதை உரைத்தான்.....
இது தெளிவா ??? குழப்பமா ??? இது தெளிவான குழப்பம்.
Be mercilessly critical about bad people’s thoughts and actions, but love them unconditionally because they also constitute the Supreme Brahmam.
அனைவரையும் எந்த கட்டுப்பாடும் இல்லாத அன்போடு நோக்குங்கள்.
ஆனால் அவர்களின் செயலில் உள்ள, சிந்தனையில் உள்ள, தீய செயல்களை, தீய எண்ணங்களை மூர்க்கமாக எதிர்த்து துரத்துங்கள்.
No comments:
Post a Comment