வஞ்சக மனிதர்களின்
நாடழிக்கும் நாத்திறனும்
ஈரமில்லா நெஞ்சினரின்
உறவறுக்கும் செயல்திறனும்
நெஞ்சகத்து கடிந்திறங்கி
ஊன்குலைத்து உயிர்துடிக்க
அஞ்சுகின்றேன் நீலவர்ணா
மான்போலே மருளுகின்றேன்
மாய்வதற்காய் அஞ்சவில்லை
கொஞ்சுமொழி கோமகனே
எனக்கென்று எதுவுமில்லை
தந்துவிட்டேன் உன்தனக்கே
நெஞ்சகத்து நீயிருக்க
நொந்திடுமோ நின்மனமே
வேய்ங்குழலின் ஓசையினை
மறைத்திடுமோ நீசனுரை
சின்ன குழைந்தையவன்
காண்பவர்க்கு பாலனவன்
கலங்காதே கோவிந்தா
காத்திடுவேன் கண்மணியே
கீழ்மக்கள் காண்கிலாது
தீமொழிகள் கேட்டிலாது
மனக்கோட்டை தனில்வைத்து
காத்துநிற்பேன் யுகயுகமாய் !!
எனைக்காக்கும் கண்ணனவன்
நான் காக்க வேண்டுகிறான்
இப்பிறவி பெற்றபயன்
இதுவன்றி வேறென்ன
- தனஞ்சயன்
நாடழிக்கும் நாத்திறனும்
ஈரமில்லா நெஞ்சினரின்
உறவறுக்கும் செயல்திறனும்
நெஞ்சகத்து கடிந்திறங்கி
ஊன்குலைத்து உயிர்துடிக்க
அஞ்சுகின்றேன் நீலவர்ணா
மான்போலே மருளுகின்றேன்
மாய்வதற்காய் அஞ்சவில்லை
கொஞ்சுமொழி கோமகனே
எனக்கென்று எதுவுமில்லை
தந்துவிட்டேன் உன்தனக்கே
நெஞ்சகத்து நீயிருக்க
நொந்திடுமோ நின்மனமே
வேய்ங்குழலின் ஓசையினை
மறைத்திடுமோ நீசனுரை
சின்ன குழைந்தையவன்
காண்பவர்க்கு பாலனவன்
கலங்காதே கோவிந்தா
காத்திடுவேன் கண்மணியே
கீழ்மக்கள் காண்கிலாது
தீமொழிகள் கேட்டிலாது
மனக்கோட்டை தனில்வைத்து
காத்துநிற்பேன் யுகயுகமாய் !!
எனைக்காக்கும் கண்ணனவன்
நான் காக்க வேண்டுகிறான்
இப்பிறவி பெற்றபயன்
இதுவன்றி வேறென்ன
- தனஞ்சயன்
No comments:
Post a Comment